நீயின்றி நானில்லை
நீயின்றி நானில்லை
1 min
11.5K
நீயின்றி என் வாழ்க்கை முழுமை அடைய மறுக்கிறது..
நீ பேசும் வார்த்தைகளும் உன் முகபார்வையும் என்றும் என் நெஞ்சோடுதான்..
உன் கைவிரல்கள் தொட்டவுடன் என் இமைகள் அசைக்க மறந்துவிட்டது..
உன் இதழ்கள் பட்டவுடன் விழிகள் உன்னை கண்டு வெட்கம் கொள்கிறது..
நெஞ்சோடு உன்னை பற்றிக்கொண்டு தூரமாய் சென்றுவிடுவேனடா..
நமக்கென்று ஒரு உலகம் என் இதயத்தில் வடித்து வைத்திருக்கிறேன் என் சிம்மாசனத்திலே நீ அமர காத்து கிடக்கிறேன்...
உன்னுடனே இருந்து விடுகிறேனடா....
நீ என்றும் எனக்கு மட்டுமே என் இதயத்தை உடைத்து பார்க்க நீ விரும்பினால் கூட உன் நினைவுகளோடு பேசிக்கொண்டு உன் கதைகளின்
இரசிகையாய்
உன்னை இரசித்து கொண்டே
மறைந்துவிடுவேன்..
எனதுயிரிலே கலந்து உயிர்பித்தவன் நீயடா...