STORYMIRROR

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

4  

Arivazhagan Subbarayan

Abstract Classics Inspirational

மயக்கம் என்ன

மயக்கம் என்ன

1 min
364



நுகர்வு வெறியில் 

மயங்கிக் கிடக்கும் 

புலன்களின் அறியாமையில் 

உணர்வுகளும் சேர்ந்து புலன்களுக்கு ஆதரவு கொடுக்க

இன்பம் துய்த்து 

துய்த்த இன்பத்தால் 

புலன்கள் மரத்துப்போக

மதிமயங்கி 

உணர்வுகள் மழுங்கி 

நுகர்ந்த இன்பங்களை 

மனது நினைவு வைத்திருப்பதால் 

மீண்டும் மீண்டும் 

அதே இன்பங்களைத் தேடி ஓடி 

இன்பங்கள் கிடைத்தாலும் 

நுகர முடியாது 

உடல் சோர்வுறும்போது 

மனம் வெறுப்படைந்து 

பழைய நினைவுகள் 

ஏக்கமாக மாறி

மனதை அலைக்கழிக்கும் போது 

எதிலும் சுவாரசியமின்றி 

சலிப்படையும் போதுதான் 

புலன்களால் உருவாகும் இன்பம் 

பூஜ்ஜியம் என்பது புரியும்!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract