முத்த(ம்)மிழ்
முத்த(ம்)மிழ்
பின்னாலிருந்து அவளை அணைத்து
கழுத்தோரம் இதழ் பரப்பி
காதுமடல் அருகே மெல்ல கடித்து
கண்மணி எனக்கொரு கவிதை சொல் என்றேன்
முன்னாள் எனை இழுத்து
கண்ணோடு கண் நிறுத்தி
அவள் இதழோடென் இதழ் பொருத்தி
இப்போது வாசித்துக்கொள் என்றாள்
அவள் இதழ் திறந்து நாவுடன் குலாவி
தேன் கவிதை குடித்து தேகம் சிலிர்த்தபோது
பொறாமையில் என் கைப்பேசியோ
அலாரம் ஒலித்து கனவை முடித்தது