மழை
மழை
துளி துளியாக,
நீ தீண்ட வரும் போது,
நீ உருவாக்கும் தென்றல்,
மெல்லியதாக ஒரு தொடுதலை உணர்த்தும்,
அந்த தொடுதலில் உணரும் ஆனந்தம்,
உன்னால் உருவாக்கப்படும் மண் வாசம்,
அதை நான் ரசிக்கும் வேளையில்,
என்னை முழுவதுமாய் நனைந்து விட்டு செல்கிறாய்,
என் மனதில் இருக்கும் கவலைகளை தூக்கிக் கொண்டு...