மகாராணி
மகாராணி
அவளுக்கு அணிகலன் அணிந்து
ராணியாக்கவில்லை அவன்.
அவள் அதனை
எதிர்ப்பார்க்கவும் இல்லை.
மாத வருமானம்
அடிப்பட்டு கிடக்க
மகாராஜாவிற்கு
ஆறுதல் மகாராணியே.
தோற்று போய்விடுவான் என்று துடிப்பதும்
தேற்றி விட்டால்
கடந்து விடுவான் என்று
அணைப்பதும் அவளே.