கண்ணாமூச்சி!
கண்ணாமூச்சி!
பகலெல்லாம் பார் முழுவதும்
அலைந்து திரிந்த பகலவன்
சந்திரனைக் காணாது
கோபக் கனல் வீசியே...
ஓரிடத்தில் அயர்ந்து உறங்கிட!
புவிமகள் பின்னால்
ஒளிந்திருந்த சந்திரன்
இரவுப் பொழுதினில்
மெல்ல முகங்காட்டுகிறான்!
இரவும் பகலும் கண்ணாமூச்சி
விளையாட்டு!
சூரியனும் சந்திரனும்....
ஒருவரை ஒருவர் துரத்திச் செல்ல
புவிமகள் சாமர்த்தியமாய்
ஒருவரை ஒருவர் காட்டிக் கொடுக்காது...
கண்டு இரசிக்கிறாள்!