STORYMIRROR

Nithyasree Saravanan

Romance

4  

Nithyasree Saravanan

Romance

காதல் நீள்கிறதே

காதல் நீள்கிறதே

1 min
232


காதல் கொண்ட கணமே கணவன் ஆனாய்


அனுதினமும் அன்பை பொழிந்தாய் 


கோபம் வந்தாலும் சிறு அமைதி மட்டுமே 


முகம் காட்டி சொற்களால் வாட்ட மாட்டாய் 


என் முகம் வாடினாலும் தாங்க மாட்டாய் 


தாய்மை அடைந்த போது கண்ணுக்குள் வைத்து தாங்கினாய் 


பிரசவ வலி கண்டு என் கரம் பற்றி கலங்கினாய்


குட்டி தேவதையை கையில் ஏந்தி மகிழ்ந்தாய் 


ஓடி ஓடி உழைத்து வசதியாய் வளர்த்து 


திருமணமும் முடித்து பெண்ணை வளர்த்தது போல 


பேரப் பிள்ளைகளையும் வளர்த்து மகிழ்ந்தாய் என்னோடு 


இன்று ஓய்வாய் அமர நாம் இருவரும் பேசிக்கொள்ள 


ஓராயிரம் கதைகள் காத்திருக்க அன்போடு அனுதினமும்


அதை பகிர்ந்து மகிழ இன்னும் காதல் நீள்கிறதே....!!!



Rate this content
Log in

Similar tamil poem from Romance