காதல் நீள்கிறதே
காதல் நீள்கிறதே
காதல் கொண்ட கணமே கணவன் ஆனாய்
அனுதினமும் அன்பை பொழிந்தாய்
கோபம் வந்தாலும் சிறு அமைதி மட்டுமே
முகம் காட்டி சொற்களால் வாட்ட மாட்டாய்
என் முகம் வாடினாலும் தாங்க மாட்டாய்
தாய்மை அடைந்த போது கண்ணுக்குள் வைத்து தாங்கினாய்
பிரசவ வலி கண்டு என் கரம் பற்றி கலங்கினாய்
குட்டி தேவதையை கையில் ஏந்தி மகிழ்ந்தாய்
ஓடி ஓடி உழைத்து வசதியாய் வளர்த்து
திருமணமும் முடித்து பெண்ணை வளர்த்தது போல
பேரப் பிள்ளைகளையும் வளர்த்து மகிழ்ந்தாய் என்னோடு
இன்று ஓய்வாய் அமர நாம் இருவரும் பேசிக்கொள்ள
ஓராயிரம் கதைகள் காத்திருக்க அன்போடு அனுதினமும்
அதை பகிர்ந்து மகிழ இன்னும் காதல் நீள்கிறதே....!!!

