STORYMIRROR

Ravivarman Periyasamy

Romance

4  

Ravivarman Periyasamy

Romance

காரிகையே

காரிகையே

1 min
332

புன் சிரிப்பை காட்டும் உன் முகம்

இலையுதிர் காலத்தில் பூத்த பூமியாய் என் மனம்

முட்களும் பூக்களாய் மலர்ந்து வசந்தங்களாய் ஆன காலமது

யாமோ வெற்று வானத்தில் எதையோ தேடும் வானம் பாடியாய் பாடாமல்

நிலத்தில் நிலவைப் பற்றிய கனவு

விளையாத பூமியிலும் கார் ஈயுமாம் 

விளைவை அறிய எப்போது ஈவாய் என் காரிகையே

கார் தான் பொழியுமோ

நிலமும் பொழிகிறது அருவியாய்

ஞாயிற்றிடம் பெற்று ஒளிரும் திங்களைப் போல

பெண்மைக் காதல் ஆண்மைக் காதலாய்

ஆண்மைக் காதலும்கூட பெண்மைக் காதலாய்

காரும் ஈயும் பாரும் ஈயும்

ஈயாத காரிகையே

ஈதல் சிறப்பு....


Rate this content
Log in

Similar tamil poem from Romance