காரிகையே
காரிகையே
புன் சிரிப்பை காட்டும் உன் முகம்
இலையுதிர் காலத்தில் பூத்த பூமியாய் என் மனம்
முட்களும் பூக்களாய் மலர்ந்து வசந்தங்களாய் ஆன காலமது
யாமோ வெற்று வானத்தில் எதையோ தேடும் வானம் பாடியாய் பாடாமல்
நிலத்தில் நிலவைப் பற்றிய கனவு
விளையாத பூமியிலும் கார் ஈயுமாம்
விளைவை அறிய எப்போது ஈவாய் என் காரிகையே
கார் தான் பொழியுமோ
நிலமும் பொழிகிறது அருவியாய்
ஞாயிற்றிடம் பெற்று ஒளிரும் திங்களைப் போல
பெண்மைக் காதல் ஆண்மைக் காதலாய்
ஆண்மைக் காதலும்கூட பெண்மைக் காதலாய்
காரும் ஈயும் பாரும் ஈயும்
ஈயாத காரிகையே
ஈதல் சிறப்பு....