STORYMIRROR

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Tragedy Classics

4  

க.வெங்கடேஷ் ஊத்தங்கரை.

Tragedy Classics

இடம்

இடம்

1 min
250

 நாம் காணும் இடங்கள் 

பல புதிதே இங்கு.... 

நாம் நினைக்கும் படி தான் 

அவ்விடங்கள் 

இருக்கும் என்றால் 

அது அபூர்வம்......

நீ நினைத்ததை முடிக்க 

ஓர் இடம் சென்றால் 

அவ்விடம் தகுந்தாற்போல் 

நீ தான் உன்னை மாற்ற 

வேண்டும்... 

சில விடயங்கள் குறை...

சில செய்கைகள் மற....

சில பழக்கங்கள் சேர்....

கூட்டம் அதனை தவிர்.....

தனிமையில் இருந்தாலும் 

சிந்தனை சிறப்பாய் இருத்தல் 

மட்டுமே முக்கியமானது.   

உன்னை யாரும் 

செதுக்கமாட்டார்கள்

நீ பணமே கொடுத்தாலும்

வழியை மட்டுமே அவர் 

கூறுவர்.  .....

உன்னை செதுக்கும் உளி 

உன் சிந்தை மட்டுமே...

உந்தன் வடிவம் உனது 

உன்னை எப்படி வேண்டுமே 

நீயே செதுக்க...... 

என்ன சில காலம் தேவை... 

இருந்துவிட்டு போகட்டும்

ஆனால் சிலையாய் மாறு

இல்லாவிடில் யாவும் வீன்..........


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Tragedy