காதல் பூட்டு
காதல் பூட்டு
பார்ப்போர் கண்களை பறிக்கும்
மாய முத்து மாலை போல்,
உன்னை நினைத்து
என் சொற்களை
கோர்த்தேனடி...!
என் மனதில்...
ஆனால் கண்ணாடி துகள் போல்,
என் இதயம்
உடைந்து சிதறி போனதடி...!
என்னவளே...
<
em>பீனிக்ஸ் பறவை போல்
மீண்டும் உயிர்ப்பித்தேன்..,
என் கண்ணீராலும் காதலாலும்..!!
உன்னிடத்தில் தந்து விடுகிறேன்..
என் இதயமும்
அதன் திறவுகோலும்..!
என் உயிர் இதயமே..!
அதனை திருடப்படாமலும்,
உடைந்து விடாமலும்
பார்த்துக் கொள்வாயாக...!
என் காதலே....❤