ஈன்றவனுக்கு பின் இல்லவன்!
ஈன்றவனுக்கு பின் இல்லவன்!
தந்தையிடம் கிடைக்கும் பாசம்
என்றும்,
தனித்துவம் பெறுகிறது
காரணம்,
தன்னம்பிக்கை எனும்
பெரும் செல்வத்தை
அவரின் கைப்பிடித்து
நடக்கும் போது
.கிடைக்கிறது....
அதோடு,
தன்னை தன் தோள் மேல்
அமர்த்தி....
அதோ பாரு! என் செல்வமே!
என்று உயர்த்தி
காண்பவன் ஈன்றவன்....
ஆனால் ,
ஈன்றவனின் நேசத்திற்கு
வரையறை இல்லாவிடினும்
கால வரையறை இருக்கிறது....
ஒரு ஆணுக்கு,
"தாய்க்கு பின் தாரம் "
என்ற சொல் எப்படியோ....
அதே போல் தான்,
பெண்ணுக்கும்
"ஈன்றவனுக்கு பின் இல்லவன் "-னு
இருக்கிறான்
என்பது
உண்மையாகிறது.....
அது எப்படி என்றால்?
தன் மன்னவனை மணந்து
ஈன்றவனின் கை விடுத்து
மணாளன் கை பிடிக்கிறாள்
இனியாவும்
இன்னவனே என்று....
அவனும் அவளை தோல் மேல்
தூக்கி வைத்து கொண்டாடுகிறான் ...
தான் பெற்ற முதல் மகள்
இவள் தான்
என்றாவறு ....
அவளின் இன்னவைகள்
அவை யாவை என்று
அறிந்து அதை
பூர்த்தி செய்கிறான்
அன்பவன்..... அன்பவளுக்காக
காதலுடன் கலந்த காலம்
உள்ள வரை......
பெண்ணானவளுக்கு,
ஈன்றவனுக்கு
பின்
இல்லவனனே !!!
உற்றவனாகிறான்..... ஆகையால்
இல்லவனும் தந்தை ஆகிறான்.......!!!