நித்திரையில் நீதானே
நித்திரையில் நீதானே
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
கார்மேகம் தவழ்ந்து செல்ல - அது
மண்ணை முத்தமிட்டது மழையாய் .....
மழையின் ஸ்பரிசம் மண்ணில் - அது
நிலத்தில் தவழ்ந்திட்டது வாசனையாய்......
மலர்ந்த மலரின் வாசனை - அது
காற்றில் கலந்திட்டது இயல்பாய்......
இரவினை நிலவு சூழ - அது
நிலபரப்பை குளிர்ந்திட்டது ஒளியாய்.....
அந்த ஒளியும் மங்கியே காண
அங்கு ஓர் மங்கை நடைபோட...
அவள் பிரகாசத்தில் அவன் மயங்க
அவன் தன்னையே இழந்த நிலையில்......
அவள் நினைவாக
பல நாட்களாய்
ஏதும் அறியாமல்
விழித்து இருந்து
மீண்டும் அவளை
காண துடிக்கும்
பருவ இளைஞன்
திடீரென்று
ஒரு நாள் கனவில்
அவள் வருவதை
அவன் கண்டு
திகைத்து நிற்க
ஒலி எழுப்பினான்
அன்பே...கண்ணே...
நித்திரையில் நீதானே.....!!!