STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

4  

Kalai Selvi Arivalagan

Romance Fantasy Inspirational

ஏனடி...

ஏனடி...

1 min
285


உன் குரல் அலைகளில்

சிக்கித் தவிக்கும்

என் மனசின் செவிகளுக்கு

இன்று ஏன் விடுமுறை?

உன் வார்த்தைகள் தரும்

மென்மையான சுகத்தினை

அனுபவிக்க ஏனடி நீ 

தடை செய்கிறாய்?

மேலும் மேலும் 

என் இதயத்தின் அறைகளில்

காதல் கீதம் கேட்டிட

உன் குரலோசை தேவை

தேனாய் இனித்திடும் 

அவ்வினாடிகளில் நான்

என்னை மறந்தேனடி...

ஏனடி மறுமுறையும் 

என்னை யாசிக்க வைக்கிறாய்?

காதல் பிச்சை கேட்கும்

இந்த யாசகனின் 

இதயத்தினில் வாசம் செய்ய

என்று நீ வருவாய்?


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Romance