ஏனடி...
ஏனடி...
உன் குரல் அலைகளில்
சிக்கித் தவிக்கும்
என் மனசின் செவிகளுக்கு
இன்று ஏன் விடுமுறை?
உன் வார்த்தைகள் தரும்
மென்மையான சுகத்தினை
அனுபவிக்க ஏனடி நீ
தடை செய்கிறாய்?
மேலும் மேலும்
என் இதயத்தின் அறைகளில்
காதல் கீதம் கேட்டிட
உன் குரலோசை தேவை
தேனாய் இனித்திடும்
அவ்வினாடிகளில் நான்
என்னை மறந்தேனடி...
ஏனடி மறுமுறையும்
என்னை யாசிக்க வைக்கிறாய்?
காதல் பிச்சை கேட்கும்
இந்த யாசகனின்
இதயத்தினில் வாசம் செய்ய
என்று நீ வருவாய்?