எந்தன் நண்பி
எந்தன் நண்பி
தனிமையை அணைத்துக்கொண்டு
சிந்தனையில் சிக்கிக்கொண்டு
தவித்திருந்தேன் பூங்காவில்
மெல்ல என் அருகில்
வந்தது அணில் ஒன்று
என்னை சுற்றியே வட்டமிட்டது
திடீரென்று விரைந்து ஓடியது
திரும்பி எனை நோக்கி வந்தது
அது உண்ட கொய்யாகனியுடன்
என் கண்களில் நீர் திரண்டது
யாரும் உணரா என் பசியினை
அது உணர்ந்துக்கொண்டதால்!!
