STORYMIRROR

SANTHOSH KANNAN

Inspirational

4  

SANTHOSH KANNAN

Inspirational

என்னைச் சுற்றிய நறுமணம்

என்னைச் சுற்றிய நறுமணம்

1 min
378

வாய்க்கால் கரையோரம் வாழும் மீனெல்லாம்

வளைந்து நெளிந்து ஓடும் வயலோரம்

கம்மாத் தண்ணீரும் கால்வாய் நீராகும்

கெழுத்தி கெண்டைங்க துள்ளி விளையாடும்


நண்டு நத்தையும் நாங்கூழ்ப்

புழுவும்

உண்டு திமிரேறும் உடலும்

உரமேறும்

நாரை கொக்குனு நாத்தைச்

சுற்றியே

சகதி வாசத்தில் சடுகுடு விளையாடும்


கரம்பை மண்ணுமிங்கே களிமண் ஆகிவிடும்

கலப்பை ஏருமிங்கே காலை ஊன்றிவிடும்

ஆழ உழுதாலே அடிமண்

மேலேறும்

ஏழை எங்களுக்குச் சந்தனக் கூழாகும்


வெளஞ்ச பயிரெல்லாம் வேர்வை வாசந்தான்

களத்து மேடெல்லாம் கதிரு வீசுந்தான்

அவுச்சுப் போட்டாலே அரிசிப் புழுங்கலாம்

அப்படியே அரைச்சாக்க அரிசிப் பச்சையாம்


ஆக்கி உண்டாலே அமிர்தம் இதுவாகும்

காக்கி நெல்லுமே வெள்ளை உடம்பாகும்

மீதம் இருந்தாக்கா பழைய சோறாகும்

நீச்சத் தண்ணிக்கு நறுமணம் ஏதாகும்.

( உழத்தி மகன் )


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational