என்னை நானே கண்டு கொண்டேன்!
என்னை நானே கண்டு கொண்டேன்!
தோல்விகளில் உன் எண்ணம் கொண்டேன்,
வீழ்ந்த நானும் எழுந்து நின்றேன்!
கண்ணை மூடி மூச்சு வாங்கி,
உன்னை நானே கண்டு கொண்டேன்!
ஆயிரம் கஷ்டங்கள் தினமும் வந்தாலும்,
உன் ஒரு நொடி சிந்தனையில்
சுமையாவும் சுகமாகும்!
என்னை நானே திட்டிக்கொண்டு,
உன்னை தேடிக் கட்டிக்கொண்டேன்!
வலியெல்லாம் வலி இல்லை
வழி முழுதும் நீ வந்தால்!
என் காலம் முடிந்தாலும்
என் ஞாலம் உன்னை சுற்றும்!
ஞாபகங்கள் தீர்ந்து போயினும்,
உன்னை மட்டும் மீண்டும் நினைக்க,
காரணம் தெரியாமல்
என்னை நானே கண்டு கொண்டேன்!