என்ன சொல்ல?
என்ன சொல்ல?
நதிகளை
தாய் என்கிறோம்...
தெய்வம் என்கிறோம்...
நதிகள் இணைப்பு என்கிறோம்!
நதிகள் இணைந்ததோ இல்லையோ?
கழிவுகள் இணைந்தது!
கழிவுநீர் கலந்தது...
இழிவு படுத்துவது... வழிபாடு செய்வது!
புனித நீராடி....?
புண்ணியம் தேடுவது!
உயிருள்ளவரை பெற்றோரை
உணவின்றி உருக்குலைத்து...
மாண்ட பிறகு
திதி எனும் பெயரிலும்
விரதமெனும் பெயரிலும்
விருந்து படைத்து...
தன் வயிற்றில் அடைத்து
பெருமை பேசுவதை....
என்ன சொல்ல?