எண்ணங்களின் ஏக்கங்கள்
எண்ணங்களின் ஏக்கங்கள்
எனது எண்ணங்களில் எழுகின்ற
எழுத்துக்களின் ஏக்கங்களை
எனது சுற்றத்தாரோ கவிதை என்கிறார்கள் - ஆனால்
எனக்கு மட்டுமே தெரியும்,அவை
எனது கவிதை வரிகள் மட்டுமல்ல !
எப்பொழுதும் என்னவளையே
எண்ணி தனிமையில் எங்கும்
எனது இதயத்தின் ஏக்கங்கள் என்று.
என்னவளே - எங்கு இருக்கிறாய் !