சென்னை
சென்னை
இங்கு ஜாதிக்கு சங்கம் வைத்தோரும் இல்லை,
மதத்திற்கோர் மன்றம் வைத்தோரும் இல்லை,
இங்கு சிலரின் வஞ்சங்களும் உண்டு,
பலரின் நல் நெஞ்சங்களும் உண்டு,
கருகிய கனவுகளும் உண்டு,
கார்மேகமாய் விரிந்த கனவுகளும் உண்டு,
காற்றுடன் போட்டியிடுவோரும் உண்டு,
காற்றுடன் கவி பேசுவோரும் உண்டு,
ஆங்கிலேயரின் ஆடை அணிவோரும் உண்டு,
பாரம்பரிய பட்டாடை அணிவோரும் உண்டு,
பஞ்சம்புழைக்க வந்தோர்க்கெல்லாம்,
தஞ்சம் அளித்த பொன் பூமி இது,
தவறு எங்கள் மண்ணில் அல்ல,
பழிப்போரின் கண்ணில்,
வலி தந்தோர்க்கும் வழி காட்டும்,
அனைவரையும் அரவணைக்கும்,
சென்னை எங்கள் அன்னை.