என் கண் கரைக்கும் காதலே
என் கண் கரைக்கும் காதலே
நான் வாழ வழி வகுத்து,
நீ வெளி வாழ சென்றாயோ?
சுற்றரின் அருகாமை சுகமளிக்கும் என நினைத்து,
என்னை சுட்டெரித்து நீ சென்றாயோ?
உந்தன் நினைவை அளிக்கும் பொருட்களை மறைத்தனர்,
உன்னை மறப்பேன் என்று,
உந்தன் நினைவாய் நானே இருக்க மனம் மறக்க மறுப்பதை அறிவாயோ?
கண்டவுடன் கொண்ட காதல் காணாமல் போகுமே,
கண்கள் கரைத்திடும் காதல் காலமெல்லாம்
வாழுமே...🖤