STORYMIRROR

SANTHOSH KANNAN

Romance

4  

SANTHOSH KANNAN

Romance

அவளும் நானும்

அவளும் நானும்

1 min
355

முன்னால போறவளே

மூனு காலு கொண்டக்காரி

பின்னால மாமன் வாரேன்

என்னானு கேட்டுப் போடி

கண்ணழகி உன்னக் காண

கம்மா ஓரம் காத்திருந்தேன் கண்ணடிக்க ஓடி வந்த

கருவாச்சி என்னத் தேடி


நெருஞ்சி முள்ளுக் குத்த

பாதமெல்லாம் இரத்தம் தானே வரிஞ்சிக் கட்டிக் கிட்டு

உயிர்போக வந்தேன் ஓடி

வலிய மறந்து நீயும்

வாமடையில் ஏறி நின்ன

விழியில் தெரிஞ்ச வலி

நெஞ்சுருகச் செய்த தடி


உப்புக் கல்லு ஒத்தடம்

உங்க ஆத்தா கொடுக்கையில உதட்டோரச் சுழிப்பில் நானும்

உசுரையே விட்டேன் அடி

உன் கழுத்தில் தாலிகட்டி

உன்னுடனே சேர்ந்து வாழ

என்னோட அப்பன நான்

எதிர்த்து நின்ன காலமடி


பழச நெனச்சு இப்போ

பாவிநானும் என்ன செய்ய

வயசு கடந்து போச்சு

சொல்லுதிந்த நரச்ச முடி

பெத்த புள்ள எல்லாம்

தொல்லயினு நம்மை வெறுக்க வத்துன வயிறு ஓட

வைராக்கிய நடை போடி


உன் கண்ணு மூடும்போதே

என் கண்ணும் மூடிறனும்

சாமிய வேண்டி இருக்கேன்

தூங்கும் போதே சாவுவர

நீயும் நானும் இங்கே

நிரந்தரமா தூங்க வேணும்

தாயும் சேயும் ஆகத்

தரைக்குள்ள போக வேணும்.

( கற்பனைக்காரன் )


Rate this content
Log in

Similar tamil poem from Romance