மழை நீர்
மழை நீர்
தண்ணீருக்கு வாசனை இல்லை!
தரணியில் மழை நீருக்கு நறுமணம் இல்லை!
தறிகெட்டு ஓடும் நீருக்கு முகவரி இல்லை!
தன்னிச்சையான கார்மேகம் நீரின் நிரந்தரப் பெட்டகம் இல்லை!
விவசாயப் பயிர்களும் அதிக மழை நீரில் மூழ்கிடுமே!
விகாரமான மழை நீரில் விவசாயமும் கால்நடைகளும் அழிந்திடுமே விலையேற்றத்தினால் மனிதக்குலம் அமைதியாகத் துன்புறுமே!
சூரிய ஒளியின் அழகுக் கதிர்களால் பூமியும் அழகு பெறுமே!
சூழ்நிலை இயற்கைக் காரணிகளால் நீர்நிலை தூய்மை அடையுமே!
சூறைக் காற்று வீசியதை மறந்து இயற்கை புதிதாகப் பிறந்ததைப் போன்று பொழிவு பெறுமே!
சூரியகாந்திப் பூவைப் போலச் சிரித்த இயற்கையும் மீண்டும் இயங்க தொடங்கிடுமே!
தண்ணீரில் முதல் உயிரினம் பிறந்திடுமே!
தங்கு தடையின்றி உரிய நேரத்தில் மழை நீர் பொழிந்திடுமே!
தடங்கள் இல்லாமல் விவசாயமும் செழித்திடுமே!
ஆண்டுகள் பல ஓடிடுமே!ஆகாய மழையினால் விவசாய சூழ்நிலை மாறிடுமே!
ஆசீர்வதிக்கும் பெற்றோர்களின் நல்லாசியுடன் வெற்றிகள் பல பெற்றிடுமே!