STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

VNIT கல்லூரி தேர்தல்

VNIT கல்லூரி தேர்தல்

5 mins
499


VNIT கல்லூரிமுதலாம் ஆண்டு மாணவர்கள் ஹாஸ்டல் வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.கல்லூரி தேர்தல் நடை பெறுவதால்,யாருக்கு ஒட்டு போடுவது என்று ஒவ்வொருவரும் குழுவாக அமர்ந்து விவாதித்து கொண்டு இருந்தார்கள்.

ஆனால் மூன்றாவது ஆண்டு மாணவன் ராகுல் தலைமையில் வந்த குண்டர் கூட்டம் அவர்களை விடுதியை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்கவில்லை.அதனால்,அவர்கள் விரும்பிய வேட்பாளர் ரோஹித் ககு ஒட்டு போட முடியாமல்,அவரும் தேர்தலில் தோற்று போய் விட்டார்.


ரோகித் தரப்பு தேர்தல் கண்காணிப்பு குழுவிடம் புகார் அளித்தும் அவர்கள் 

அந்த புகாருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சூழ்நிலையில் மூன்றாம் ஆண்டு மாணவர்களை பற்றி தரகுறைவாக விடுதி சுற்று சுவரில் எழுதி வைக்க ராகுல் தரப்பு ஆத்திரத்தில் பொங்கி எழுந்தனர்.


அந்த நேரத்தில் திவாரி தனியாக,நான்காம் ஆண்டு மாணவர் விடுதிக்கு வர,மாணவர்கள் எல்லோரும் அவனை அடித்து துவசம் பண்ணி விட்டார்கள்.அந்த நேரத்தில் ராகுல் கூட்டமாக வந்து அவனை காப்பாற்றி கொண்டு சென்றனர்.

இது நடந்த ஒரு வாரத்திற்கு பிறகு,சீனிவாசன் நகரத்தில் இருந்த திவாரி வீட்டிற்கு சென்று அவனை சந்தித்தான்.

அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள்.திவாரியின் அப்பா ஆந்திராவில் பணி புரியும் போது சீனிவாசன்,திவாரியும் அடுத்தடுத்த வீட்டில் வசித்து வந்தனர்.அந்த காலம் முதல் இருவரும் நண்பர்கள்.

கல்லூரியில் எதிர் அணியில் இருந்தாலும்,நேருக்கு நேர் அவர்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள்.

அதனால் தான்,அன்றைக்கு அவனை மாணவர்கள் அடித்து துன்புறுத்தியது,,வருத்தம் அளித்தது என்று மன்னிப்பு கேட்க வந்தான்.

அப்போது தான் திவாரி விடுதிக்கு வந்த காரணத்தை சொன்னான்.

குண்டர்கள் முதலாம் ஆண்டு மாணவர்கள் விடுதியில் காவல் காத்து வந்ததை,திவாரியின் நண்பன் ஒரு தினசரி பத்திரிக்கையில் வேலை செய்து வருபவன் புகை படம் எடுத்து அதில் ஒரு பிரதியை திவாரி கையில் கொடுத்து இருந்தான்.

அந்த புகை படத்தை சீனிவாசனின் கையில் கொடுக்க தான் திவாரி அன்று அங்கு வந்துள்ளான்.

சீனிவாசனின் தந்தை ஒரு வக்கீல்.அவர் பெயர் சந்திரசேகர்.

அவருக்கு கல்லூரியில் நடந்த தேர்தல் பற்றி விளக்கமாக கடிதம் எழுதி இருந்தான்.

அதற்கு அவர்,தேர்தல் கண்காணிப்பு குழு புகாருக்கு நடவடிக்கை எடுக்காமல் இருந்தால்,நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்து தேர்தலை செல்லாது என்று வாதாடலாம் ,அதற்கு ஆதாரமாக புகை படம் ஏதாவது இருந்தால்,முயற்சி செய்து பார்க்கலாம் என்று பதில் கடிதம் எழுதி இருந்தார்.

சந்திர சேகர் அனுப்பும் கடிதம் திவாரி வீட்டு விலாசதிர்க்கு அவர் அனுப்ப,திவாரி அதை சீனிவாசன் வசம் கொண்டு வந்து கொடுப்பான்.

எப்போதும் திவாரிக்கு ஒரு கடிதம் எழுதி விட்டு அதனுடன் சீனிவாசனுக்கு கடிதம் இணைத்து அனுப்புவது அவர் வழக்கம்.அதை படித்து விட்டு தான் திவாரி,புகை படம் மற்றும் சந்திரசேகர் கடிதத்தையும் எடுத்து கொண்டு சீனிவாசனை சந்திக்க வந்த போது தான் மாணவர்களால் தாக்க பட்டான்..

இப்போது அந்த புகை படம், மற்றும் சந்திரசேகர் எழுதிய கடிதத்தையும்

சீனிவாசன் கையில் கொடுத்தான்.

அதை வைத்து அந்த தேர்தலை செல்லாது என்று கூற வைக்க வேண்டும்,அதற்கு தேவையான முயற்சியை சீனிவாசன் எடுக்க வேண்டும் என்று திவாரி கேட்டு கொண்டான்.என்னதான் எதிராக போட்டி போட்டாலும் முறையில்லாமல் வெற்றி பெறுவது உண்மையான வெற்றி அல்ல என்று திவாரி நினைத்தான்.

அங்கு இருந்தே தன்னுடைய அப்பா சந்திரசேகரின் தொலை பேசி எண்ணுக்கு STD அழைப்பு போட்டு பேசினான்.அவரும் அந்த ஊரில் உள்ள ஒரு வக்கீல் நம்பரை கொடுத்து தொடர்பு கொண்டு பேச சொன்னார்.உள்ளூர் வக்கீல் சந்திரசேகரின் சட்டக்கல்லூரி சக மாணவர்,நண்பர்.

சீனிவாசன் திவாரியை பார்த்து விட்டு விடுதிக்கு திரும்பினான்.


விடுதியில் ரோஹித் மிகவும் கவலையுடன் காணப்பட்டான்.என்ன தான் கலை நிகழ்ச்சி போட்டியில் வெற்றி பெற்றாலும்,சக மாணவர்களின் ஏளன பார்வை அவனை அவமானமடைய வைத்தது.

நான்காம் ஆண்டில் படித்து கொண்டு,தேர்தலில் வெற்றி பெற முடியாவிட்டால் செல்வாக்கு இல்லை என்று அவன் காது பட பேசினார்கள்.


அந்த நேரம் சீனிவாசன் அங்கு வந்து கொஞ்சம் வெளியில் செல்ல வேண்டும்,ஒருவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும் வா போகலாம் என்று அழைக்க அரை மனதுடன் அவன் பின்னால் வண்டியில் அமர்ந்து சென்றான்.

இருவரும் சீனிவாசன் அப்பா சந்திரசேகர் சொன்ன வக்கீல் வீட்டின் முன்பு போய் நின்றார்கள்.

அவர் பெயர் மேத்தா அந்த ஊரின் பிரபல வக்கீல்.அவரை பார்ப்பதே அரிது.சந்திரசேகர் சொல்லி இருந்ததால் அவர் பார்க்க சம்மதித்து இருந்தார்.

அவரை நேரில் பார்த்து நடந்த சம்பவங்களை விளக்கி எப்படி இவர்களுடைய அணி வெற்றி வாய்ப்பு இருந்தும் தோல்வியை சந்திக்க வேண்டியது ஆயிற்று என்று

ஆதாரங்களை கூற,அவரும் கவனத்துடன் கேட்டு விட்டு,இதற்கு நிச்சயம் பரிகாரம் கிடைக்கும் நான் ஏற்பாடு செய்கிறேன் என்று கூறி சில விண்ணப்பங்களை தயார் செய்ய சொல்லி அதில் சீனிவாசன்,ரோகித் இருவரது கையொப்பம் வாங்கி கொண்டார்.

ஒரு வாரம் சென்றது,கல்லூரியின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கு, மற்றும் கல்லூரி முதல்வருக்கும் 

தேர்தலில் முறைகேடு நடந்ததாக புகார் வந்துள்ளது.அது பற்றி நீதி மன்றத்தில் வந்து விளக்கம் அளிக்கும் படி தகவல் வந்து இருந்தது.


முதல்வர்,இது என்ன புது சிக்கல் என்று,கண்காணிப்பு குழுவில் இருந்த பேராசிரியர்களை அழைத்து பேச,அவர்களும் முதலாம் ஆண்டு மாணவர்கள் ஒட்டு போடாமல் இருக்க,ராகுல் குண்டர்களை வைத்து தடை செய்தது பற்றி அப்போது தான் முதல்வரிடம் சொல்ல,அவர் மிகவும் கோப பட்டார்.

தேர்தலை நடத்தாமல் நிறுத்தி இருக்கலாம்,என்னிடம் ஏன் கலந்து ஆலோடிக்கவில்லை என்று கேட்க,குழுவில் இருந்த பேராசிரியர்,அந்த நேரம் கல்லூரி இயக்குனர் நடத்திய கூட்டத்தில் பங்கு கொள்ள வெளியூர் சென்று விட்டீர்கள்,உங்களை தொடர்பு கொள்ள முடியவில்லை என்று சமாதானம் கூறினார்கள்.

இதை சமாளிக்க வேண்டுமே,

இல்லையென்றால் இயக்குனர் அலுவலகத்தில் இருந்து முதல்வருக்கு நோட்டீஸ் வரும்.

உடனே தகுந்த விளக்கம் கொடுக்குமாறு கண்காணிப்பு குழுவுக்கு உத்தரவு இட்டார்.

கண்காணிப்பு குழு சொன்ன விளக்கம் ஏற்று கொள்ள முடியவில்லை.முதலாம் ஆண்டு மாணவர்கள் கலந்து ஒட்டு அளிக்காமல் எப்படி தேர்தல் முறையாக நடக்கும்., என்று கேட்டு நீதிமன்றம் அதை வழக்காக எடுத்து விசாரணை செய்தது.

விசாரணைக்கு எடுத்ததும்,தேர்தல் முடிவை மறு அறிவிப்பு வரும் வரை

நிறுத்தி வைக்க சொல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை கேட்ட ரோகித் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.

நீதி மன்றம் ஒரு மாதத்தில் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.


ஒரு தேர்தல் நடக்கும் போது எல்லா மாணவர்களுக்கும் ஒட்டு போடும் உரிமையை கொடுக்க வேண்டும்.

ஆனால்,இந்த கல்லூரியில் நடந்த தேர்தலில்,விடுதில் தங்கி படிக்கும் முதலாம் ஆண்டு மாணவர்கள் யாருமே ஒட்டு போடவில்லை,ஒட்டு போட அனுமதிக்கவும் இல்லை.

இது ஒரு உரிமை மீறல் பிரச்சினை,இதை தேர்தல் கண் காணிப்பு குழுவிற்கு புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்க தவறி விட்டார்கள்.முதலாம் ஆண்டு மாணவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்ய முடியாமல் போய் இருக்கிறது.சமர்ப்பித்த ஆதாரங்கள் அது உண்மை என்று ருசு படுத்துகிறது.ஆகையால் இந்த நடந்து முடிந்த தேர்தல் விதிகளுக்கு புறம்பாக இருப்பதால்,இதை ரத்து செய்து விட்டு,இனி ஒரு முறை தேர்தல் நடத்த வேண்டும்.அதில்

எல்லோருக்கும் வாக்கு அளிக்க,சந்தர்ப்பம் கொடுக்க பட்டதா என்று தேர்தல் கண் காணிப்பு குழு உறுதி செய்ய வேண்டும்.ஆகையால் நடந்து முடிந்த தேர்தல் செல்லாது,

வெற்றியாளர்கள் பெயரை அறிவிக்க முடியாது.

மீண்டும் முறையாக தேர்தலை நடத்தி வெற்றியாளர்கள் யாரென்று அறிவிக்க வேண்டும் என்று கல்லூரி நிர்வாகத்திற்கு இந்த கோர்ட் உத்தரவு இடுகிறது என்று தீர்ப்பு வந்தது.

இதை கேட்ட ரோகித் மகிழ்ச்சியின் உச்சானிகொம்புக்கு போய் விட்டான்.மகிழ்ச்சி தாங்காமல்

சீனியை கட்டி பிடித்து அவன் முகத்தில் முத்தமிட்டான்.

நான்காவது ஆண்டு மாணவர்களுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.அது மட்டுமல்ல,இனி எதிர்காலத்திலும் இது போல நடக்காமல் இருக்க இந்த நீதி மன்ற உத்தரவு உதவும்.

ரோகித்,சீனிவாசன், அமித் சர்மா எல்லோரும் சென்று வக்கீல் மேத்தாவை பார்த்து நன்றி கூறினார்கள்.

ராகுலுக்கு இது பெரிய அவமானமாக போய் விட, தன் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு மாற்று சான்றிதழ் வாங்கி கொண்டு சென்று விட்டான்.அத்துடன் அவன் நிறுவிய கட்சியும் கலைக்க பட்டது.

அதற்கு பிறகு திவாரி அந்த கட்சிக்கு தலைமை பொறுப்பை ஏற்று கொண்டான்.

வல்லப நகர் கல்லூரி மற்ற கல்லூரிகளுக்கு இப்போது எடுத்து காட்டாக விளங்கியது.எதற்கும் வன்முறை ஒரு தீர்வு அல்ல என்பதை இந்த நீதி மன்ற தீர்ப்பு உணர்த்தியது.

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract