Saravanan P

Abstract Comedy Drama

4  

Saravanan P

Abstract Comedy Drama

விவசாயம் பழகுவோம்

விவசாயம் பழகுவோம்

2 mins
403


ராஜாவின் அப்பா இளவரசு தன் ஆட்களுடன் நிலத்தை டிராக்டர் மற்றும் மாடுகள் மூலம் உழுது கொண்டிருந்தார்.

அவருக்கு நினைப்பு எல்லாம் வெளி மாவட்டத்தில் படிக்கும் பையன் மேல் தான்.

6 மாதங்கள் கழித்து,

கல்லூரி விடுதியில் கெவின் வீட்டுக்கு கிளம்பி கொண்டிருக்க அங்கு வரும் ராஜா டேய் இந்த லீவுக்கு எங்க வீட்டுக்கு வரியா என கேட்க,கெவின் சிரித்துக்கொண்டே என்ன சண்டைக்கோழி படம் மாதிரியா என கேட்க, எனக்கு மீரா ஜாஸ்மின் மாதிரி தங்கச்சி இல்லையே என ராஜா சிரித்தான்.

இல்லைடா வீட்டில் கேக்கனும் என சொல்லிக்கொண்டே கெவின் பையை தூக்கி மேலே வைக்க,ராஜா கேக்க சொல்ல,கெவின் வீட்டில் கேட்க அவர்கள் 1 வாரம் தங்கி விட்டு வா,எந்த கஷ்டமும் அங்கு இருக்கவங்களுக்கு தராதா,காசு அக்கவுண்ட்ல போட்டு விடுறோம் என சொல்லி போனை வைத்தனர்.

கெவின்,ராஜா பஸ்ஸில் ஏறி மையசமுத்திரம் நகராட்சிக்கு சென்றனர்.

அங்கு கெவினை வரவேற்கும் ராஜாவின் குடும்பம் தங்க ஏற்பாடுகள் செய்து தருகிறது.

கெவின் சாப்பிட சங்கட பட போதேல்லாம் ராஜாவின் அம்மா அவனை சாப்பிட வைப்பார்.

ராஜா அவன் அப்பா மற்றும் கெவின் அவர்கள் வயலுக்கு சென்று நடக்கும் வேலைகளை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

தென்னை பண்னை ஒரு பக்கம் இருக்க அங்கே இயற்கை உரம் தயாரிக்கும் இடம் ஒன்று இருந்தது.

கெவின் விவசாயத்தில் அதீத ஆர்வம் உள்ளவன்,ராஜாவின் அப்பாவிடம் கேள்வியாக கேட்டு துளைத்து விடுவான் மற்ற நேரம் ராஜா விலக்கி கூறுவான் பதிலை.

கெவின் ஊருக்கு கிளம்பும் முன் அறுவடை செய்யும் நாள் வந்தது.

அனைவரும் அதை ஒரு பெரும் விசேஷமாக கொண்டாடினர்.

கெவின் அவன் கற்றுக் கொண்ட சில விஷயங்களை அங்கு உள்ள அவன் வயதினற்கு கூற அனைவரும் அதில் ஆர்வம் அடைந்தனர்.

கெவினை அழைத்து முதல் பயிரை அறுவடை செய்ய சொல்ல அவன் அதை மகிழ்ச்சியுடன் செய்ய பின்பு அறுவடை மிக சிறப்பாக நடந்தது.

கெவினின் கிளம்பும் போது நெய்,அரிசி போன்றவற்றை ராஜாவின் அப்பா தர,கெவின் அவன் வீட்டில் கேட்க பணம் குடுக்க சொல்லி கூறினர்.

கெவின் அதற்கு "அங்கிள்,அம்மா பணம் குடுத்து தான் வாங்க சொன்னாங்க" என கூற ராஜா பணத்தை வாங்கி கொண்டார்.

கெவின் கனத்த இதயத்துடன் அங்கிருந்து கிளம்பினான்.

ராஜாவின் அப்பா சிரித்து கொண்டே கூறினார் "பிள்ளைய நல்லா வளர்ந்துருக்காங்க" என கூறினார்.

எல்லா பெற்றோரும் கேட்க விரும்பும் விஷயமும் இதுதான்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract