STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

விடுமுறை

விடுமுறை

2 mins
391

ராஜன் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்து சேர்ந்தார்.அது ஒரு வளர்ந்து வரும் கிராமம்.

விவசாய நிலங்கள் நிறைய,அதற்கேற்ப பாசன வசதி உண்டு.

அவர் பசுமை தீர்ப்பாயத்தின் அதிகாரி.அந்த ஊரில் அதை பற்றி யாருக்கும் தெரியாது.சின்ன வயதில் அந்த ஊரை விட்டு வெளியில் சென்று படித்து இப்போது பெரிய அதிகாரத்தில் இருக்கிறார்.

ஊருக்கு வந்த பிறகு தான் தெரியும் பலர் விவசாய நிலங்களை கோடி ரூபாய் விலையில் விற்று கொண்டு இருப்பது.வாங்கும் பன்னாட்டு நிறுவனம் பெரிய நிறுவனம்,உலகளவில் பிரசித்தி பெற்றது.உற்பத்திசெய்யும் பொருளுக்கு நிறைய தண்ணீர் தேவை படுகிறது.அதை கருத்தில் கொண்டு முக்கால்வாசி நிலத்தை வாங்கி விட்டார்கள்.


அந்த நிலங்களுக்கு செல்வதற்கு இவருடைய நிலம் தான் பிரதான வழி, அதை விலை பேச தான்,அவருடைய அப்பா அவரை வர சொல்லி இருந்தார்.நிலத்தை விற்று விட்டு மகனுடன் போய் விடலாம் என்று நினைத்து இருந்தார்.ராஜன் வந்த பிறகு தான் தெரிந்தது ஊர் மக்கள் ஏமாற்ற படுவது.அடுத்த நாள் அவருடைய நிலத்தை விலை பேச விலை உயர்ந்த இரண்டு கார்கள் வீட்டு வாசலில் வந்து நின்றது.இறங்கிய பெரிய அதிகாரிகள் இரண்டு கோடி ரூபாய் பணத்துடன் வந்து அமர்ந்தார்கள்.

தன்னை இன்னார் என்று தெரிவிக்காமல்,இங்கு தொழில் தொடங்க அனுமதி வாங்கி விட்டீர்களா என்று கேட்க அதை அரசியல்வாதிகள் செய்து கொடுத்து விடுவார்கள்,நிலத்தை வாங்கி கொடுத்தால் போதும்,

அனுமதி சம்பந்த பட்ட அதிகாரியை பார்த்து வாங்கி விடுவார்கள்.


அவர் விடுமுறையில் ஊருக்கு போய் இருக்கிறார் என்று கூறி அவர் பதிலை எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

அதற்கு ராஜன் சொன்னார்,அனுமதியை கண்ணில் பார்த்த பின் நிலத்தை விற்க சம்மதம் என்றார்.

அடுத்த நாள் அனுமதி பெற அந்த இருவரும் நிர்வாக இயக்குநர் சேர்ந்து அந்த அதிகாரியை பார்க்க 

வந்தனர்.அறைக்குள் வந்த பிறகு தான் அந்த அதிகாரி ராஜன் என்று அவர்களுக்கு புரிந்தது.

அவர்களிடம் தன்னால் அனுமதி தர இயலாது.அது நன்றாக விளையும் விவசாய பூமி.ஏற்கனவே நிறைய பூமி கட்டிடங்கள் ஆகி விட்டது.


இதையும் அப்படி அழிந்து போக விட மாட்டேன்.மிரட்டி வாங்கிய அனைத்து நிலங்களையும் திருப்பி கொடுத்து விட்டு வாங்க,நானே இடமும் கொடுக்கிறேன்,அனுமதியும் கொடுக்கிறேன் என்று திருப்பி அனுப்பி விட்டார் 

அந்த ஊர் மக்கள் அரசியல்வாதிக்கு பயந்த விற்க தயார் ஆகி விட்டனர்.ராஜன் அனுமதி கொடுக்கவில்லை என்று தெரிந்து எல்லோரும வந்து நன்றி சொன்னார்கள்.


Rate this content
Log in

Similar tamil story from Abstract