STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

வெண்மை

வெண்மை

1 min
15

பசுபதி கையில் இருந்த வெள்ளை துண்டை தூக்கி பிடித்து சமாதானம் என்று மனைவியிடம் கெஞ்சி கொண்டு இருந்தான்.

மனைவி கண்ணம்மா பத்திர காளி ஆக மாறி சண்டை போட்டுக்கொண்டு இருந்தாள்.

அன்று முதல் தேதிவாங்கினசம்பளத்துடன்,

டாஸ்மாக்சென்றவன் வெறும் கையோடு வீட்டில் வந்து நிற்கிறான்.

நாற்பது ஆயிரம்,பிடித்தம் போக கையில் கிடைப்பது இருபது ஆயிரம்.அதை வைத்து தான்

பள்ளி கட்டணம்,துணிமணி,வீட்டு செலவு,மாமனார் மாமியார் மருத்துவ செலவு அத்தனையும்

செய்தாக வேண்டும்.

ஆனால் இவனோ குடித்துவிட்டு 

ATM கார்டை தொலைத்து விட்டு வந்து நிற்கிறான்.கூட வந்த நண்பனை பணம் எடுத்து வா என்று கொடுத்து இருப்பான்.இனி அவன் கணக்கில் இருக்கும் பணத்தை எடுத்து குடிக்க செலவு செய்யும் வரை அதை திருப்பி கொடுக்க மாட்டான்.இது போல பல தடவை நடந்து விட்டது.

ஆனால் இந்த முறை கண்ணம்மாவால் பொறுத்து கொள்ள முடியவில்லை.

அரிவாளுடன் வெட்ட போய் விட்டாள்.அப்போது தான் வெள்ளை துண்டை காண்பித்து சமாதானம் 

பேச முயற்சி செய்து கொண்டு இருந்தான்.

எந்த பெண் தான் பொறுத்து கொள்வாள்.மாத மாதம் இதே பிரச்சனை.அவனை விட்டு விலகி செல்ல முடிவு எடுத்து அவனிடம் கூட சொல்லி

விட்டாள்.வயதான மாமனார் மாமியார்,இவளை

சமாதான படுத்தி,தங்கள் கையில் இருந்த பணத்தை கொடுத்து இந்த தடவை மன்னித்து விடு என்று கெஞ்சி கேட்டு கொண்டு இருந்தார்கள்.

எவ்வளவு காலம் தான் பொறுத்து போக முடியும்.

சமாதானம் பேச வேண்டிய இடத்தில் பேசலாம்.

இதற்கு பிறகு அவனுடைய போக்கு மாறவில்லை என்றால் என்ன செய்வது.

முற்றும்



Rate this content
Log in

Similar tamil story from Abstract