STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

வாழ்க்கையின் முன்னோடி

வாழ்க்கையின் முன்னோடி

3 mins
421

வாழ்கையின் முன்னோடி


வாழ்க்கை ஒரு உற்சாகத்துடன் செல்ல நமக்கு ஒரு உந்து சக்தி தேவை.ஒரு சினிமா நடிகர்,ஒரு அரசியல்வாதி,ஒரு குரு,ஒரு யோகி ,ஒரு எழுத்தாளர்,ஒரு பேச்சாளர்,என்று இப்படி யாராவது ஒருவர் ஒரு உந்து சக்தியாக விளங்குவார்.

இது ஒரு புறம் இருக்க அப்பா,அம்மா,அண்ணா,அக்கா,அல்லது உறவினர் கூட அந்த உந்து சக்தியாக இருக்கலாம்.


ராகினி குடும்பம் ஒரு நடுத்தர குடும்பம் தான்.அப்பா அம்மா,ஒரு தம்பி.

ராகினி படித்து பெரிய வேலைக்கு செல்ல வேண்டும் என்பது ஆசை.படிக்கும் போது பணம் இல்லாத காரணத்தால் படிப்பு தள்ளி போனது கூட உண்டு.ஆனாலும் நம்பிக்கை தளராமல் படித்து,எல்லோரையும் போல ஒரு மென் பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து,கிடைத்த வருவாயில் அம்மா அப்பாவிற்கு உதவி செய்து,கூடவே தம்பியையும் படிக்க வைத்தாள்.திருமண வயது 

கடந்தாலும் ,அது நடக்கும் போது நடக்கட்டும் என்று எண்ணி தன் வேலையை தொடர்ந்து செய்து வந்தாள்.

அப்படி அவள் செயல் பட அவளுக்கு உந்து சக்தியாக விளங்கியவர்,அவளுடைய கிராமத்தை சேர்ந்த இட்லி விற்கும் பாட்டி.அவள் பள்ளி செல்லும் காலத்தில் இருந்து அந்த பாட்டி இட்லி சுட்டு விற்று கொண்டு இருக்கிறார்.அதில் கிடைக்கும் வருமானத்தில் தான் பெற்றோர் இல்லாத தன் பேத்தியை படிக்க வைத்து கொண்டு இருக்கிறார்.

பேத்தியும் பல தேர்வுகளை எழுதி இன்னும் ஒரு வருடத்தில் மாவட்ட அதிகாரியாக பொறுப்பு ஏற்று கொள்ள இருக்கிறார்.

இதற்கு அந்த பாட்டி இட்லி வியாபாரத்தில் கொள்ளை லாபம் வைத்து சம்பாதிக்க வில்லை.

ஒரு இட்லி இருபது ரூபாய்க்கு விற்கும் இந்த நாளில்,அவர் ஒரு இட்லி ஒரு ரூபாய் விலையில் தான் விற்று வருகிறார்.ஏழை குழந்தைகளிடம் அதுவும் வாங்குவது இல்லை.கடையில் கூட்டம் எப்போதும் குறையாது.என்ன விலைவாசி ஏறினாலும்,ருசி,அளவு,கொடுக்கும் சட்டினி,சாம்பார் எதிலும் குறைவு இல்லை.

அந்த பாட்டிக்கு அவரது தொழில் மீது அளவு கடந்த நம்பிக்கை,வரும் வாடிக்கையாளர் எண்ணிக்கை அதிகம் ஆனதே தவிர,குறையவில்லை.அவர் ஆயுசுக்கும் இட்லி ஒரு ரூபாய் விலை தான்.எப்படி சாத்தியம் ஆகிறது.நம்பிக்கை.அது அவருக்கு அதிகம் இருந்தது.எத்தனையோ பேர் அவரை பற்றி நாளிதழில் படித்து விட்டு அவரை தேடி வந்து உதவி செய்து வருகிறார்கள்.

நல்ல மனம் உள்ளவர்கள் உதவ தயாராக இருந்தாலும்,தேவை இருந்தால் மட்டுமே உதவியை ஏற்று கொள்வார்.அதிகமான உதவி அவரை சோம்பேறி ஆக்கி விடும்.என்று அவர் நன்கு புரிந்து வைத்து இருந்தார்.

அந்த பாட்டி தான் ராகினிக்கு முன்னோடி.பாட்டியின் தன்னம்பிக்கை,அளவிற்கு மீறிய ஆசை இல்லை,தள்ளாத வயதிலும் உழைக்கும் மன தைரியம் போன்ற குணங்களால் பெரிதும் கவர பட்டாள்ராகினி.

ராகினி க்கு ஒரே குறிக்கோள்,அம்மா அப்பாவிற்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.தம்பியை ஒரு வக்கீல் ஆக ஆக்க வேண்டும்.வசதி இல்லாதவர்கள் வழக்குகளை பணம் வாங்காமல் வாதாடி கொடுக்க வேண்டும்.கிராமத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கு படிப்பில் வழிகாட்டி ஆக இருக்க வேண்டும்,

இப்படி எல்லாம் தான் அவளுடைய கனவு.தன்னையும் சேவை பணிக்கு அர்பணித்து கொள்ள வேண்டும்.பணம் மட்டும் குறிக்கோள் அல்ல.இல்லற வாழ்வு இதற்கு ஒரு இடையூறாக இருக்கும் என்று எண்ணி திருமணம் வேண்டாம் என்று முடிவு எடுத்து விட்டாள்.

ஒரு இட்லி பாட்டியால் முடியும் என்றால் என்னாலும் முடியும் என்று நம்ப ஆரம்பித்தாள்.


ஆண்டுகள் சென்றன.இப்போது ராகினி வேலைக்கு செல்வது இல்லை.சொந்தமாக ஒரு வீடு கட்டி அதில் பெற்றோரை குடி வைத்தாள்.

தன்னுடைய குடும்பம் மாடியில் வாசிக்க ,கீழ் தளத்தில் முதியோர்களுக்கு என்று ஒரு இல்லம் தொடங்கி பெற்றோரை அதை கவனித்து கொள்ள கூறினாள்.இட்லி பாட்டி கடையில் இருந்து அவர்களுக்கு உணவு வாங்கி கொடுக்க ஏற்பாடு செய்தாள்.

ராகினி நன்றாக படிக்கும் மாணவர்களை அடையாளம் கண்டு,மேலே படிக்க வழிகாட்டி,படித்த பிறகு நல்ல வேலைக்கு சேர உதவினாள்.சின்ன சின்ன குற்றங்களுக்கு தண்டனை பெறும் ஏழை கிராமத்து மக்களுக்கு தம்பி மூலம் சட்ட ஆலோசனை வழங்கி,தண்டனையை தவிர்க்க உதவினாள்.எந்த குற்றம் செய்யாத அந்த கிராமத்து ஏழைகள் யாரையோ நம்பி அந்த குற்றத்தை ஒப்பு கொண்டு தண்டனை பெற்று,சமூகத்தில் கெட்ட பெயர் வாங்குவதை குறைக்க முயன்றாள்..


அவளுக்கு அந்த முயற்சி வெற்றியா தோல்வியா என தெரியாது.ஆனால் முயசியே ஒரு வெற்றி என்பதும் மட்டும் புரிந்தது.கொள்கை இருந்தால் எந்த முயற்சியும் வெற்றி தான்.அதுவும் பிரதி பலன் பார்க்காமல் எடுக்கும் எந்த முயற்சியும் வெற்றி தான்..


ஒரு ரூபாய் இட்லி பாட்டி போல பலர் உருவாக வேண்டும்.அதற்கு பின் புலமாக நாம் இருப்போம் என்ற நம்பிக்கையை கொடுத்தால் இது போல பல பாட்டிகள் கண் முன்னே வந்து நிற்பார்கள்.

சேவை செய்ய எல்லோருக்கும் விருப்பம்,அதற்கு தகுந்த மேடை கிடைக்க வேண்டும்,தகுந்த நண்பர்கள் அமைய வேண்டும்.


நான் செய்வேன் என்று கையை தூக்கினால்,நம்மை தூக்கி விட நாலு பேர் வருவார்கள்.நம்பிக்கை தான் வாழ்க்கை,வாழ்க்கை தான் நம்பிக்கை என்று புரிந்து கொண்டு இன்னும் சேவையை எங்கு விரிவு படுத்தலாம் என்று தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தாள்ராகினி.

நாமும் அவளுக்கு உதவ தயார் ஆவோம்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract