வாழ்க்கை எளிதல்ல
வாழ்க்கை எளிதல்ல
மனைவி : இந்த மனுசன் சரியாவே சாப்பிட மாட்டேங்குது என்னவா இருக்கும்? சாப்பாடு டேஸ்ட்டா இல்லையோ.... (திருமணம் ஆனா 3 மாதத்தில் இருந்து என்றாவது ஒரு நாள் நன்றாக சமைத்து தனது கணவரை சந்தோஷப் படுத்த நினைத்தால் தற்பொழுது 2 வருடம் ஆகிறது இதுவரை முடியவில்லை)
மனைவி: இன்று சாப்பாடு எப்படி?
கணவன் : ம்ம்...
சில வாரம் கழித்து
மனைவி: சில நுணுக்கங்கள் தனது தாய் நண்பர்களிடம் கேட்டு இன்று புது விதமாக சமைத்தால்...
இன்று சாப்பாடு எப்படி?
கணவன் : ம்ம்... ஓக்...
மனைவி: மனதில் சிறு மகிழ்ச்சி... இன்று ஓக்கே என்று புது வார்த்தை வந்தது என்று....
பல வருடம் கடந்தது... அவளுக்கு சாப்பாடு எப்படி என்று கேட்ப்பதையே மறந்து போனால்....
அந்த மனைவி தனது கணவருக்காக என்று சமைத்தாள் சாப்பாடு அமிழ்தமாக இருந்தது.... தனது கணவர் என்றாவது ஒரு நாள் தனது சாப்பாட்டை நன்றாக இருக்கிறது என்று கூறுவார் என்று நம்பினாள்... 20 வருட கல்யாண வாழ்க்கை முடிந்தது.... அவளும் சாப்பாடு எப்படி என்று கேடப்பதையும் மறந்து போனாள்...
வீட்டில் சமைப்பது சாப்பாடு போடுவது ஒரு பெண்ணின் வேலை
.. இதில் பாராட்ட என்ன இருக்கிறது என்பது இந்த கணவனின் எண்ணம்.... அந்த எண்ணமே இதுவரை அவளிடம் சாப்பாடு நன்றாக இருக்கிறது அல்லது நன்றாக இல்லை என்று சொல்ல வில்லை..
ஒரு நாள் அந்த கணவனுக்கு ரொம்ப பசியாக இருந்ததால் மருமகள் வந்து பரிமாறுவாள் என்ற எதிர்பார்ப்பு இல்லாமல் முதல் முறையாக தானே சாப்பாடு போட்டு சாப்பிட்டான்..... அன்று ஒன்று உணர்ந்தான்.... இறந்து போன தனது மனைவி புகை படத்தை பார்த்து.... நீ சமைத்து வைத்திருந்த உணவு மிகவும் நன்றாக இருந்தது என்று....
ஒருவரின் அருமை அவரின் மறைவிலேயே தெரியும்..