உணவில் கவனம்
உணவில் கவனம்
ராம்,ஷ்யாம் இரு நண்பர்கள் பள்ளி விடுமுறை ஆரம்பமாவதை முன்னிட்டு ஒரு பாஸ்ட் புட் கடைக்கு சென்று பல உணவுகளை வாங்கி உண்கின்றனர்.
வீட்டில் தன் அம்மாவிடம் கூட என்ன அம்மா கெரட்,முட்டகோஸ்லாம் செய்ற,வறுவல் செய்ற என இருவரும் அவரவர் வீட்டில் தர்க்கம் செய்தனர்.
உணவு பழக்கத்தில் உணவில் சுவை சேர்க்க வேண்டும் ஆனால் சுவையான உணவு மட்டுமே உண்பது தவறு.
வாரம் வாரம் அவர்கள் பாஸ்ட் புட் கடை நோக்கி நகர ஆரம்பித்தனர்.
அம்மா,அப்பா கண்டிக்க தொடங்கியதால் சற்று செல்வதை குறைத்தனர் ஆனால் ஆரோக்கியமான உணவு அவர்கள் உட்கொள்வது குறைந்து போனது.
ராம்,ஷ்யாம் பள்ளிக்கு கிளம்பி கொண்டிருக்கும்போது தலை சுற்றியும்,வயிற்று வலியிலும் அவதிப்பட்டனர்.
மருத்துவமனை அழைத்து சென்றால் மிகவும் துரித அல்லது பாஸ்ட் புட் உண்டதால் இந்த பாதிப்பு என கண்டறிந்து சொன்னார்கள்.
மருந்துகள்,க்ளுகோஸ், இட்லி,தயிர் சாதம் என நாட்கள் சென்றன.
இருவரும் குணமடைந்து வீடு திரும்பி சில நாட்கள் கழித்து வீட்டில் கறி செய்து குடுக்க இருவரும் வேண்டவே வேண்டாம் என்றனர்.
அப்பொழுது இருவரது பெற்றோரும் கூற வந்தது "வீட்டிலோ,வெளியிலோ எந்த உணவாக இருந்தாலும் கட்டுப்பாடு வேண்டும்,நம் உடம்பு பற்றி நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும்."
இருவரும் பின்பு உணவு உண்ண அமர்ந்தனர் மனதில் அந்த வார்த்தைகளை பதிய வைத்து கொண்டு.