STORYMIRROR

Saravanan P

Romance Crime Thriller

3  

Saravanan P

Romance Crime Thriller

துப்பறிபவர்

துப்பறிபவர்

2 mins
223

உண்மை சம்பவங்கள் கொண்டு எழுதிய கற்பனை கதை

ஜெபி கல்லூரிக்கு பேருந்தில் சென்று கொண்டிருக்கிறான்.

அப்பொழுது அந்த பஸ்ஸில் ரெகுலராக பயணிக்கும் தாரா எனும் கல்லூரி மாணவி சோகமாகவே பஸ்ஸில் ஏறவும் இறங்கவும் செய்தார்.

ஒரு நாள்,நின்ற‌ பேருந்தில் படிகட்டுகளில் இறங்கும்போது தடுக்கி விழுகிறார்.

ஜெபி கீழே விழுந்த தாராவை தூக்கி விடுகிறார்.

ஜெபி அதன் பிறகு தாராவிடம் ஏன் மா,இப்ப எப்பவும் சோகமாக இருக்க?

அது ஒன்னும் இல்ல அண்ணா என சொல்லி செல்கிறாள் தாரா.

சிலநாள்கள் தாரா பேருந்தில் வரவில்லை.

ஜெபி அவன் அப்பாவோட‌ பிரண்ட் சரவணனை போய் பார்க்கிறான்.

என்ன ஜெபி,காலேஜ் வாழ்க்கை நல்லா இருக்கா?

கண்டிப்பா மாமா 

"பள்ளி வாழ்க்கை,காலேஜ் வாழ்க்கை கடந்த போனதுக்கு அப்பறம் இன்னொரு தடவை வாழனும் அப்படினு தோணும்."

என ஜெபி சொல்ல சரவணன் சரி ஓகே நம்ம வேலை எப்படி போகுது என கேட்க ஜெபி நலம் என சொல்லி சிரிக்கிறான்.

சரவணன்,பிரைவேட் டிடேக்டிவ் அவர் பிரண்டோட பையன் தான் ஜெபி.

ஜெபிக்கு எப்பவும் தான் படித்த டிடேக்டிவ் கதைகள் சொல்லி அவனுக்கு துப்பறிதல் மீது ஆர்வம் கொண்டு வந்தார்‌ சரவணன்.

சரவணன் துப்பறிதல் பற்றி கூறுவது "சுற்றி நடக்கும் சம்பவங்களை கவனித்து நம்முள் கேள்விகள் கேட்க வேண்டும் 

ஏன்,

எப்பொழுது,

எங்கே,

எப்படி,

எவை,

எவர் 

என்ற‌ கேள்விகளை நமக்குள் கேட்டாலே பல புதிர்கள் விடுபடும்." 

ஜெபி கல்லூரியில் சேர்ந்த பின் சரவணனுடன் துப்பறிதல் செய்ய ஆரம்பித்தான்.

ஜெபியும்,சரவணனும் சேர்ந்து தங்க கடத்தல் செய்யும் நபர்கள் பற்றி‌ துப்பறிந்தனர்.

தாரா அழுதுகொண்டே இருந்ததற்கான காரணம் அவள் தந்தையும் இது போன்ற விஷயத்தில் ஈடுபடுவதுதான்.

சரவணன் நகைக்கடையில் வேலை செய்யும் தன் நண்பரின் தந்தையிடம் தெரிந்து கொண்டது தங்கத்தை பவுடர் செய்து பெஸ்ட் பார்முக்கு மாற்றினால் எக்ஸ்-ரே வில் இருந்து தங்கத்தை மறைத்துவிடலாம் என்பது தான்.

சரவணன்,ஜெபி இருவரிடத்திலும் தாரா தன் தந்தை அது போன்ற ஒரு கும்பலில் சேர்ந்து கொண்டார் என கூறுகிறாள்.

தாரவின் தந்தை சந்திக்கும் டாக்டரை நிழல் போல பின் தொடர்கின்றனர்‌ சரவணனும் ஜெபியும்.

அவர்கள் தெரிந்துகொள்வது அந்த டாக்டரிடம் தாரா அப்பா போல் 35 புதிய நபர்கள் சமீபமாக டீரிட்மெண்ட் எடுக்கிறார்கள்.

தாரா அப்பா பணத்தை ஒரு மர்ம நபரிடம் வாங்குகிறார் வாங்கிவிட்டு நாளைக்கு கிளம்புறேன்,தம்பி நல்லா டிரெய்ன் பண்ணிருக்கேன் என்கிறார்.

சரவணன் தன் நண்பர்கள் மூலம் விசாரித்தில் ஏர்போர்ட்டில் செக்யூரிட்டி டைட் பிளைட் மூலம் போக வாய்ப்பே இல்லை என்கிறார்கள்.

ஜெபி ஹைவே மூலம் சரவணனை பார்க்க வந்து கொண்டிருந்தான்.

அப்பொழுது பிளைட் செக்யூரிட்டி என யோசித்துகொண்டே ஹைவே டோலை பார்த்துவிட்டு வண்டியை ஓரமாக நிறுத்திவிட்டு சரவணனுக்கு போன் செய்கிறான்.

மாமா,அவங்க ஹேவே மூலம் போவாங்க என சொல்லி போலீஸை தாராவின் அப்பா போகும் காரை பாலோ பண்ண சொல்கிறான்.

போலீஸ் தாரா அப்பா போகும் காரை பாலோ செய்கிறார்கள்.

காரை மடக்கி சோதனை போடுகிறார்கள்,காரில் எந்த பேஸ்ட்டும் இல்லை.

சரவணன்,ஜெபி திட்டத்தை அந்த கடத்தல் கும்பல் மாற்றியிருக்குமோ என சொல்லி அவர்களை வர சொல்கிறார்கள்.

அப்பொழுது அய்யோ என கத்தும் தாரா அப்பா என்னை ஆஸ்பத்திரி கொண்டு போங்க என கத்துகிறார்.

ஆஸ்பத்திரியில் டாக்டர் தாரா அப்பா சொன்னதை கேட்டு ஆடி போகின்றனர்‌ டீரிட்மெண்ட் தந்த டாக்டர்கள்.

தங்கத்தை பேஸ்ட் பார்முக்கு மாற்றி அதை ஒரு பண்டில் போல் செய்து மலக்குடலின் ஒரு டாக்டர் மூலம் உள்ளே வைத்து கடத்தி ஒரு இடத்திற்கு கொண்டு சென்று பின்பு இன்னொரு டாக்டர் மூலம் எடுப்பது.

இதில் கொடுமை என்னவென்றால்,மலக்குடலில் பொருளை வைத்து இவ்வாறெல்லாம் செய்ய‌ வேண்டும்,செய்ய கூடாது என சில டாக்டர்கள் பயிற்சி அளிப்பது.

சரவணனும்,ஜெபியும் இதுபோன்ற ஒரு கேஸை இப்பொழுது தான் நம் தமிழ்நாடு கஸ்டம் ஆபிஸர்கள் ஏர்போர்ட்டில் கண்டுபிடித்தனர் என கூறுகின்றனர்.

தாரா அப்பாவிற்கு இது போன்ற பயிற்சி அளித்து அந்த கும்பலுக்கு துணை நின்ற டாக்டரை கைது செய்கின்றனர் போலீஸ்.

இது போன்று கடத்தி கொண்டு போகிறோம் என ஒப்புக்கொண்ட தாரா அப்பா போன்ற ஆட்களை கைது செய்கின்றனர் போலீஸ்.

போலீஸால் அந்த கடத்தல் கும்பலை முழுமையாக பிடிக்க முடியவில்லை

தாராவை சந்தித்து ஆறுதல் சொல்கிறான் ஜெபி.

ஜெபியின் கையை பிடித்து தாரா நன்றி சொல்ல ஜெபி உடல் சிலிர்க்கிறது.

தாராவும் ஜெபியும்‌‌ ஒருவரையொருவர் பார்த்து சிரிக்க,சரவணன் ஜெபியிடம் அடுத்த வழக்கு நம்மளுக்காக வெயிட்டிங் என சொல்ல இருங்க‌ மாமா வரேன் என சொல்லி தாராவிடம் போய் வருகிறேன் என‌ சொல்லி விட்டு தாரா முகம் பார்த்தபடியே நடந்து செல்கிறான்.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Romance