STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

டாக்டர்

டாக்டர்

3 mins
309

டாக்டர் 


மருத்துவர் என்றால் கடவுளின் அவதாரம்.போகிற உயிரை நிறுத்தும் வல்லமை படைத்தவர்.

அது ஒரு புனிதமான சேவை.

ஆனால் காலத்தின் கட்டாயம் அது இன்று ஒரு வியாபாரமாக மாறி விட்டது.


இப்படி உள்ள காலத்தில் டாக்டர் முரளி சற்று மாறு பட்டவர்.எல்லோருக்கும் இந்த சேவை இலவசமாக கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்.அந்த காலத்தில் அவரது அப்பாவும் அம்மாவும் மருத்துவர்கள் ,ஒரு பெரிய மருத்துவமனை கட்டி வைத்து இருந்தனர்.அதிக முதலீடு இல்லாமல்,லாப நோக்கு இல்லாமல் டாக்டர் முரளிக்கு அந்த மருத்துமனையை நடத்த முடிந்தது.

ஆனால் சேவையில் குறைபாடு என்று யாரும் சொல்லி விட முடியாது.


ஆனால் அவருக்கு பிறந்த மகனும் மகளும் இந்த துறைக்கு வரவில்லை.

மகள் லீலா ஒரு வக்கீல்,மகன் பாபு கார் பந்தய வீரர்.இருவரும் அவரவர் துறையில் முன்னணியில் இருந்தனர்.

மகள் உச்ச நீதி மன்றம் வழக்குரைஞர் ஆக உயர்ந்து இருந்தார்.


மகனும் கார் பந்தய வீரர் களுக்கு பயிற்சி கொடுத்து வந்தார்.அடிக்கடி விபத்தில் சிக்குவது பிறகு குணம் அடைவது அவரது வாடிக்கை.ஆனால் திருமணம் செய்து கொள்ளவில்லை.


மகளுக்கு வந்த மாப்பிள்ளை ஒரு டாக்டர் தான்.சமீபத்தில் கண் சம்பந்த பட்ட மேல் படிப்பை முடித்து விட்டு,இப்போது மாமனாரின் மருத்துவமனையை நிர்வாகம் செய்து வருகிறார்.கூடவே கண்ணுக்கு தனி பிரிவை தொடங்கி

நல்ல முறையில் நடத்தி வருகிறார்.


டாக்டர் முரளியின் மனைவி ஒரு பள்ளியை நடத்தி வருகிறார்,அதுவும் மன வளர்ச்சி குறைந்த குழந்தைகளுக்கு.


ஒவ்வொருவரும் சேவை மனப்பான்மை கொண்டவர்கள்.

மகளும் வசதி குறைவாக உள்ளவர்களுக்கு பணம் பெறாமல் வழக்குகளை நடத்தி கொடுப்பார்.இரண்டு ஜூனியர் வக்கீல்கள் அதற்காக நியமிக்க பட்டு உள்ளார்கள்.


இறைவன் எப்போதும் நல்லவர்களுக்கு தான் சோதனை கொடுப்பார்.அவர்களால் தான் அந்த சோதனையை தாங்கி கொள்ள முடியும்.


அடுத்த வாரத்தில் நடக்கும் கார் பந்தயதிற்கு டாக்டர் முரளியின் மகன்பாபு தீவிரமாக பயிற்சி எடுத்து வந்தார். அவரிடம் பயிற்சி பெறும் வீரர்கள் யாரும் தோல்வி அடைந்தது இல்லை.அவ்வளவு நுணுக்கம் தெரிந்தவர்.போட்டி என்று வந்து விட்டால் பகையும் கூடவே வந்து விடும் அல்லவா.மகனின் பேரை கெடுக்க ஒரு கூட்டம் சதி திட்டம் தீட்டி வந்தது.


டாக்டர் முரளி வெளிநாட்டில் நடக்கும் ஒரு கலந்தாய்வில் கலந்து கொள்ள

புறப்பட்டு கொண்டு இருந்தார்.

மகன் பாபு அவரிடம் வந்து ஆசி வழங்கும் படி கேட்டார்.அன்று நடக்கும் பந்தயத்தில் கலந்து கொள்ள போகும் முன் அப்பாவிடம் ஆசி வாங்க வந்தார்.முரளியும் ஒவ்வொருமுறையும் பந்தயத்தை நேரில் சென்று பார்ப்பார்.இன்று வெளிநாடு செல்ல வேண்டி இருந்ததால் மகனை ஆசிர்வாதம் செய்து விட்டு விமான நிலையம் புறப்பட்டார்.


ஒரு பத்து நிமிடம் தாமதமாக கிளம்ப

டிரைவரை சீக்கிரம் போகும்படி கூற டிரைவரும் கொஞ்சம் வேகமாக தான் காரை ஓட்டி கொண்டு சென்றார்.

ஒரு நான்கு வழி சந்திப்பில் சிக்னல் 

இன்னும் மூன்று விநாடிகள் இருக்க

கடந்து விடலாம் என்று டிரைவர் வேகத்தை கூட்ட,வலது புறத்தில் இருந்த ஒரு இரு சக்கர வாகனம் சீறி

பாய்ந்து வர,இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த டிரைவர் ப்ரேக் யை அழுத்த

விதி விளையாட,கார் இருசக்கர வாகனத்தில் பலமாக மோதி அதை ஒட்டி வந்த இளைஞர் சாலை ஓர தடுப்பில் மோதி விழுந்தார்.குப்புற விழுந்த வேகத்தில்,ஹெல்மெட் கண்ணாடி உடைந்து கண்களை சேத படுத்தி விட்டது. தோளில் அடிப்பட்டு தோள் பிசகி விட்டது.

முரளி இறங்கி ஓடி,அந்த இளைஞனை மற்றவர் உதவியுடன் காரில் போட்டு தன்னுடைய மருத்துவ மனைக்கு கொண்டு சென்றார்.அடிபட்ட இளைஞர் ஒரு இராணுவ வீரர்.மருத்துவ மனைக்கு சென்றதும் போலீசுக்கு புகார் அளித்து விட்டு உடனே அவசரமாக சிகிழ்சியை ஆரம்பித்தார். தோளில்

சிறிது முறிவு இருந்தது.ஆனால் கண்கள் இரண்டும் மிகவும் சேதம் அடைந்து பார்வை பறி போகும் நிலைக்கு வந்து விட்டது.கண்களுக்கு உடனே மாற்று கண்கள் வைத்தால் பார்வை கிடைக்கலாம்.ஆனால் அந்த இளைஞன் க்கு 

பொருந்தும் வகையில் கண்கள் வங்கியில்இருக்கவில்லை.தன்னுடைய மருமகனை அழைத்து எப்படியாவது கண்கள் ஏற்பாடு செய்து கொடுக்க சொன்னார்.

இந்த நேரத்தில் கார் பந்தயம் நடக்கும் மைதானத்தில் இருந்து வந்த செய்தி முரளியை அதிர்ச்சி அடைய வைத்தது.

மகன் பாபு ஒட்டிய கார் விபத்தில் சிக்கி தீ பிடித்து எரிந்து விட்டது.பாபுவை காப்பாற்ற முடியவில்லை.முகம் தவிர உடம்பு முழுவதும் எரிந்து விட்டது.பிரேத பரிசோதனை செய்ய அரசாங்க மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முரளிக்கு சட்டு என்று நினைவிற்கு வர,மருமகனை அழைத்து பாபுவிற்கு ஏற்பட்ட விபத்தை கூறி,உடனே அங்கு சென்று அவனது இரு கண்களையும் தான செய்ய ஏற்பாடு செய்தார்.

மருமகனும் அதை உடனே நிறைவேற்ற,அவரிடம் அந்த கண்கள் அடிபட்ட இராணுவ வீரருக்கு பொருந்துமா என்று சோதனை செய்ய சொன்னார்.மருமகனும் சோதனையை மேற்கொண்டார்.பொருந்தும் என்ற முடிவிற்கு வந்ததும் அதை அந்த இராணுவ வீரருக்கு பொறுத்த சொன்னார்.அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த பிறகு தன் வீட்டை நோக்கி புறப்பட்டார் டாக்டர் முரளி,தன்னுடைய மகனின் இறுதி சடங்கை முடிக்க..

முற்றும்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract