STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

3  

Vadamalaisamy Lokanathan

Abstract

தொடர் மழை

தொடர் மழை

2 mins
3

தொடர் மழை காரணம் கோயமுத்தூர் மாவட்டம் முழுவதும் விடுமுறை அறிவித்து இருந்தார்கள்.


முகுந்தன் இன்று சென்னை செல்ல வேண்டும்.அவனுக்கு சென்னையில் இன்று ஒரு முக்கியமான நேர்காணல்.வேலைக்கான நேர்காணல் அல்ல,திருமணம் செய்ய போகும் பெண்ணுடன் நேர்காணல்.

இன்று மாலை ஐந்து மணிக்கு சென்னை விமான நிலையத்தில் டெர்மினல் ஒன்றில் அவள் காத்து இருப்பதாக சொல்லி இருந்தாள்.அவளுக்கு ராத்திரி எட்டு மணிக்கு சிங்கப்பூருக்கு விமானம்.

அவள் பெங்களூரில் இருந்து வந்து,சென்னை வழியாக சிங்கப்பூர் செல்ல இருக்கிறாள்.

பெங்களூரில் இருந்து டிக்கெட் கிடைக்காத காரணத்தால்,சென்னை வந்து செல்கிறாள்.

அவன் சந்திக்க போகும் பெண்ணின் பெயர் நேத்ரா.

சொந்தமாக, கட்டிடங்களுக்கு உள் அலங்காரம் தொழிலை, செய்து வருகிறாள்.முகுந்தன் கோவையில் ஒரு தொழில் அதிபர்.ரெடி மேட் சிமெண்ட் பலகை தயாரித்து விற்பனை செய்து வருகிறான்.சுவர் எழுப்புவதற்கு பதிலாக இவன் தயாரிக்கும்,இந்த பலகை யை பொருத்திக்கொள்ளலாம்,வியாபாரம் நல்ல முறையில் நடந்து கொண்டு இருந்தது.

திருமணத்திற்கு பெண் தேடும் போது தான்

நேத்ரா வை பற்றி அறிந்தான்.

அவளுக்கும் பணிச்சுமை அதிகம் இருந்ததால்

போனில் கூட பேச முடியாத நிலைமை.

அது தான் விமான நிலையத்தில் சந்திக்கலாம் என்று சொல்லி இருந்தாள்.

முகுந்தன் ஒரு படி மேலே சென்று அவள் பயணிக்கும் அதே விமானத்தில் சிங்கப்பூருக்கு 

டிக்கெட் வாங்கி இருந்தான்.இன்னும் கூடுதல் நேரம் அவளுடன் நேரம் செலவழித்து அவளை பற்றி புரிந்து கொள்ளலாம் என்று.

இந்த சந்தர்ப்பம் விட்டால் அவள் வெளிநாட்டு பயணத்தை முடிந்து பெங்களூர் திரும்ப இன்னும் 

மூன்று மாதம் ஆகும்.

இவனுக்கும் எந்த காரியத்தையும் உடனே செய்து முடித்து பழக்கம்.அதனால் தான் சென்னை போக திட்டம் இட்டு இருந்தான்.

சென்னையிலும் பலத்த மழை என்று தொலைகாட்சியில் செய்தி ஒளிபரப்பாகி கொண்டு இருந்தது.

இவனுடைய விமானம்,சென்னையில் இருந்து வந்து திரும்ப சென்னை செல்ல வேண்டும்.

கடும் மழை காரணம் அந்த விமானம் சென்னையில் இருந்து கிளம்பவில்லை.

கோயமுத்தூர் விமான நிலையம்

மழை காரணம் இங்கு இருந்து புறப்படும் எல்லா விமானமும் ரத்தாகி இருந்தது.இவனுடைய சென்னை பயணம் இப்போது கேள்விக்குறி ஆகி இருந்தது.

நீண்ட காலத்திற்கு பிறகு இந்த பெண் தான்

திருமணத்திற்கு சம்மதம் சொல்லி இருந்தாள்.

இப்போது அந்த வாய்ப்பும் கை நழுவி போகும் போல இருந்தது.

அவளுடன் பேசி எப்படி மன்னிப்பு கேட்பது.வர முடியவில்லை என்று சொன்னால் தன்னை பற்றி என்ன நினைப்பாள்.நேற்றே கூட கிளம்பி சென்னை சென்று இன்று அங்கு தங்கி கூட சந்தித்து இருக்கலாம்.நேரத்தை மிச்சம் செய்ய

திட்டம் போட்டு மூன்று மணி விமானத்திற்கு டிக்கெட் வாங்கியது, தவறாக போய் விட்டது.

அவள் என்ன நினைப்பாள்.சந்திப்பை கூட ஒழுங்காக திட்டமிட தெரியவில்லை,இவனுடன் எப்படி வாழ்க்கை முழுவதும் கூட இருக்க முடியும் என்று நினைத்து விடுவாளோ என்று அச்சம் கொண்டான்.

அவள் முன்னமே சொல்லி இருக்கிறாள், அவளுக்கு நேரம் தவறாமை மிகவும் முக்கியம் என்று.இப்படி இருக்கும் போது விமானம் ரத்தாகி விட்டது என்று சொன்னால்...நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

அப்போது அவளிடம் இருந்து போன்,அவளும் மழை காரணம் சிங்கப்பூர் பயணத்தை ரத்து செய்து விட்டதாகவும்,அவனை சென்னைக்கு வர வேண்டாம் என்று சொல்ல தான் கூப்பிட்டு இருந்தாள்.மீண்டும் எப்போது சந்திக்கலம் என்று கேட்க தொடங்கும் முன்பே அவளே தான் இரண்டு நாளில் கோவைக்கு வருவதாகவும் அப்போது இந்த சந்திப்பை வைத்துக்கொள்ளலாம் என்று கூற,இவனுக்கு இப்போது தான் நிம்மதி பெருமூச்சு விட முடிந்தது.

முற்றும்



Rate this content
Log in

Similar tamil story from Abstract