STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Drama

4  

Vadamalaisamy Lokanathan

Drama

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை

1 min
362

நரி சூரியனை பார்த்து ஊழையிட்டு ஒன்றும் ஆக போவது இல்லை.

அது போல மூர்த்தியை பார்த்து அந்த ஓர் மக்கள் நீ உருப்பட மாட்டாய்,என்று கூறி கொண்டே இருந்தனர்.காரணம் அவன் ஒரு சோம்பேறியாக திரிந்து கொண்டு இருந்தான்.அவனுக்கு நிலம் இருந்தது.அதில் ஒரு சிறு குன்று இருந்தது.குன்று இருந்த காரணம் அதில் சரியாக விளைச்சல் இல்லை.

ஆனால் எப்போதும் கையில் ஒரு கல்லை வைத்து ஒவ்வொரு இடமாக சுற்றி கொண்டு இருப்பான்.எல்லோரும் அவனை ஒரு கிறுக்கன் என்று நினைத்து வந்தனர்.ஆனால் அவன் அந்த ஊர் மக்களை பற்றி கவலை படவில்லை.அவர்கள் அவனை பற்றி என்ன வேண்டு மானாலும்

சொல்லி கொள்ளட்டும்.அது அவனை பாதிக்காது .சூரியனை

பார்த்து நரி ஊழை யிட்டால் நரிக்கு தான் கேடு என்று அவனுக்கு தெரியும்.

ஒரு நாள் நிறைய பேர் காரில் வந்து அவன் நிலத்தை பார்த்து கொண்டு இருந்தனர்.ஒரு மாதத்திற்கு பிறகு அவனுடைய நிலமை தலை கீழாக மாறி விட்டது.

நிறைய பணம் கார் வீடு என்று மிகவும் வசதியாக வாழ தொடங்கி விட்டான்.

காரணம் அந்து குன்று சாதாரண பாறை அல்ல.விலை மதிப்பு மிக்க

கனிம பாறை.அதை விற்க தான் கையில் அந்த கல்லை எடுத்து கொண்டு வியாபாரியை தேடி அலைந்தான்.கடைசியாக 

அரசாங்கம் அவனுக்கு வழி காட்ட அரசாங்க உதவியுடன் அதை வெட்டி ஏற்றுமதி செய்ய தொடங்கினான்.இப்போது அவனை பார்த்து கேலி பேசியவர்கள் அவன் முன் தலை குனிந்து நின்றனர்.


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Drama