தனிமை
தனிமை
அந்த சிறு நாட்டின் மன்னர்,தன்னுடைய மகள் இளவரசி தேவிக்கு பக்கத்து நாட்டு அரச புத்திரனுக்கு மணம் முடிக்க முடிவு செய்து இருந்தார்.
ஆனால் இளவரசிக்கு விருப்பம் இல்லை.அவள் மூத்த அமைச்சர் மகனை விரும்பினாள்.
அதை தந்தையிடம் எப்படி சொல்வது என்று அன்னத்திடம் அழுது கொண்டே சொல்ல,யதேச்சையாக அது வழியாக வந்த மன்னர் கேட்டு விட்டார்.
என்ன மடத்தனம் செய்ய இருந்தேன்.மகளின் விருப்பத்தை அறியாமல் அவளை படுகுழியில் தள்ள இருந்தேன் என்று வருந்தி,மகள் விரும்பிய அமைச்சர் மகனுடன் திருமணம் செய்து வைத்தார்.
முற்றும்
