STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

திருவிழா

திருவிழா

1 min
267


திருநங்கைகள் ஒவ்வொரு வருடமும் தமிழ் மாதம் சித்திரை மாதம் பவுர்ணமி நாளில் கூவாகம் என்னும் ஊரில் கூடி கொண்டாடும் விழா

கூத்தாண்டவர் வழிபாடு.

அன்று அனைத்து திருநங்கைகள்

அங்கு கூடி விழாவில் பங்கு பெரும் பெரிய நிகழ்ச்சி அது.அன்று அந்த கோவில் பூசாரி திருநங்கைகளுக்கு தாலி கட்டுவது வழக்கம்.ஒவ்வொரு வருடமும் தவறாமல் நடக்கும் இந்த விழாவிற்கு இந்தியாவில் உள்ள அனைத்து பகுதியில் உள்ள திருநங்கைகள் அங்கு கூடுவது வழக்கம்.அன்றைய நாளில் ஒருவரை ஒருவர் சந்தித்து எண்ணங்களை பரிமாறி கொள்வது வழக்கம். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று விழா கோலம் பூண்டு இருக்கும் .

ஜோதி ஒரு திருநங்கை என்று புரிய ஆரம்பித்ததும் அவளை வீட்டில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டார்கள்.அவளுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் படித்து பட்டம் பெற்று வேலைக்கும் போக முடியாத சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியே வந்தாள்.பார்பதற்கு அழகாக இருக்கும் அவளை சீக்கிரம் திருநங்கை என்று சொல்லி விட மாட்டார்கள்.அவளுடன் படித்த சேகருக்கு போன் செய்து விவரத்தை கூற,அவன் தைரியமாக அவன் கூட தங்க வைத்து கொள்ள அனுமதி அளித்தான்.அது மட்டும் அல்ல,ஒரு ஜெராக்ஸ் கடையை ஆரம்பித்து,பார்க்க சொல்லி வேலையும் கொடுத்தான்.அவளும் அவனுக்கு உண்மையாக உழைத்து கொடுத்தாள்.கூடவே தையல் கற்று கொண்டு,தைக்கவும் செய்தாள்.

எப்படியோ அவள் செலவிற்கு சம்பாதிக்க முடிந்தது.

இப்படி இருக்க இந்த திருவிழாவை பற்றி அறிய சேகரை அங்கு அழைத்து செல்லுமாறு கேட்டாள்.

சேகரும் அவளை அழைத்து கொண்டு அந்த விழாவிற்கு போனான்.அங்கு சென்று பலரது கதைகளை கேட்ட பிறகு தான் ஜோதிக்கு புரிந்தது,தான் எவ்வளவு நல்ல நிலையில் இருக்கிறோம் என்று.அதற்கு சேகருக்கு மிகவும் நன்றி தெரிவித்தாள்.இவர்களுக்கு என்று ஒரு மறுவாழ்வு இல்லம் தொடங்கி முடிந்தவரை உதவி செய்ய வேண்டும் என்று சேகரை கேட்க,அவனும் சரி என்று சொன்னது ஜோதிக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.




Rate this content
Log in

Similar tamil story from Abstract