Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

திருமணம்

திருமணம்

2 mins
313



உலகம் முழுவதும் கொடிய தொற்று நோய் பரவும் என்று பிரபல ஜோதிடர் சொன்னதாக வந்த செய்தியை உரக்க படித்து கொண்டு இருந்தான் குமார்.

ஒரு வேளை அப்படி ஒரு நோய் வந்து விட்டால் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் ஏதாவது நடந்து விடுமா என்று மூர்த்தி மிகவும்

குழம்பி போனான்.சிறுக சிறுக சேர்த்த சொத்து பல கோடி பெறும்.

தான் இறந்து விட்டால் அந்த சொத்தை யார் அனுபவிக்க போகிறார்கள் என்று கவலை பட்டான்.

அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.எப்படியாவது ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்ய விரும்பினான்.ஆனால் பெண் கிடைப்பதே அரிதாக இருக்கிறது.

இந்த கவலையை தன் நண்பன் மூர்த்தியிடம் சொல்ல,நீ தேடுகிற பெண் கிடைக்க மாட்டாள்.ஒன்று செய்,ஒரு விளம்பரம் கொடு,அதாவது மாற்று திறன் உள்ள ஒரு பெண்ணை திருமணம் செய்ய விருப்பம் ,தகுதியானவர் தொடர்பு கொள்ளவும் என்று உன் போன் நம்பரை கொடு.யாராவது வருவார்களா என்று பார்க்கலாம் என்று கூறினான்.

குமாரும் அது போல விளம்பரம் கொடுக்க,ஒரு கண் பார்வை இல்லாத ஒரு பெண் விருப்பத்தை தெரிவிக்க,இருவரும் பேசி திருமணம் செய்து கொண்டனர்.

வாழ்க்கை இனிதாக போய் கொண்டு இருந்தது.ஜோதிடம் சொன்ன கூற்று எங்கோ ஒரு வெளிநாட்டில் பேர் தெரியாத வியாதி பல உயிர்களை பலி வாங்கியது.ஆனால் இந்த ஊரில் அது போல ஒன்றும் நடக்கவில்லை.


குமார் திருமணம் செய்த பெண்ணுக்கு தாய் வழியாக,வரவேண்டிய சொத்து ஒன்று வந்து சேர்ந்தது,குமார் மேலும் வசதி ஆனான். பிரபல கண் மருத்துவனையில் மனைவிக்கு வைத்தியம் பார்க்க மனைவிக்கு ஒரு கண்ணுக்கும் மட்டும் பார்வை கிடைத்தது.

மனைவிக்கு வந்த சொத்து ஒரு அடுக்குமாடி கட்டிடம்,அதில் மாதம் ஐம்பது ஆயிரம் வாடகை வருமானம் வந்தது.அதையும்,தன்னுடைய வருமானத்தில் ஒரு பங்கையும் போட்டு,மாத மாதம்,ஒருவருக்கு கண் பார்வை கிடைக்க ஏற்பாடு செய்தான்.

அது அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் அதிகமான மன நிறைவை கொடுத்தது.

சுபம்.



Rate this content
Log in

Similar tamil story from Fantasy