தேசம் காப்போம்
தேசம் காப்போம்


நீர்நிலை வடித்தாய்
நன்னிலம் சேர்த்தாய்
உண்டு மகிழ்ந்தோம்
உறவு பகிர்ந்தோம்.
செல்வம் யாவும்
பல்கிப் பெருக
கொடுங்கோல் வந்து
உன்னைச் சூழ,
நன்னீர் வளர்த்த
தேகமதன் செந்நீர்
வடித்துக் காத்தோம்.
முடி சூடிய என்
குடியரசே
நீ விழி மூடி
இன்று
அழுவதேன்?
மூடர் கையில்
இங்கு நீயோ?
முடவர் உன்
மக்கட் பேறோ?
அறிவை விதைப்போம்
நெறியை வளர்ப்போம்
நேசம் பகிர்ந்து
தேசம் காப்போம்!