Vadamalaisamy Lokanathan

Fantasy

5  

Vadamalaisamy Lokanathan

Fantasy

பயணம்

பயணம்

2 mins
520


பயணம்.


2021 ம் ஆண்டு,கொரோனா உச்ச கட்டத்தில் இருந்தது.பயணம் மேற்கொள்ள சொந்த வாகனம் இருந்தால் மட்டுமே சாத்தியம் ஆயிற்று.

மிகவும் அவசரம்,மருத்துவ தேவை

போன்றவை,அரசாங்க அனுமதி பெற்று பயணங்கள் மேற்கொள்ள பட்டன.மக்களும் தேவை அறிந்து பயன்களை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழ்நிலையில் கதையின் கதாநாயகன் ராஜா சென்னையில் வேலை செய்து வந்தான்.வேலைக்கு சேர்ந்து முதல் ஆண்டு முடிந்ததும்

கொரோனா ஆரம்பம்.அதனால் வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை ஏற்பட,சென்னையில் இருந்து சொந்த ஊரான சேலம் வந்து சேர்ந்தான்.வேலைக்கு சேர்ந்த இடத்தில் இவனுக்கு பயிற்சி கொடுத்த பெண் தியா மும்பையை சேர்ந்தவள்.அவளும் சொந்த ஊரான மும்பைக்கு சென்று விட்டாள்.

ஆனால் ராஜாவுடன் எப்போதும் தொடர்பில் இருந்து வந்தாள்.

அவளுடைய அப்பா சென்னையில் ஒரு வங்கியில் வேலை பார்த்து வந்த காரணத்தால் தியா சென்னையில் வேலை கேட்டு அங்குள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்த்து கொண்டு அப்பாவுடன் வீடு எடுத்து தங்கி,இருந்து வந்தனர்.தியாவின் அம்மா மும்பையில் தன் மாமனாரை கவனித்து கொண்டு மும்பையில் வேலை பார்த்து வந்தார்.

கொரோனா காரணம் தியாவும் மும்பை சென்று விட அவளுடைய அப்பா மட்டும் சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார்.அவர் அவரது பெற்றோருக்கு ஒரே மகன்.அம்மா ஐந்த் வருடம் முன்பு இறந்து போக,தியாவின் அம்மா தான் மாமனாரை பார்த்து வந்தார்.


தியாவின் அப்பா விடுமுறை எடுத்து மும்பை செல்ல போக்குவரத்து வசதி எதுவும் இல்லாததால்,போனில் பேசி கொண்டு,நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வந்தார்.

இந்த சூழ்நிலையில் தியாவின் தாத்தா உடல்நிலை மோசம் அடைய,அவர் தன் மகனை பார்க்க விரும்பினார்.தியாவின் அப்பா செய்வது அறியாது திணறி கொண்டு இருந்தார்.அவருடைய ஆரோக்கியத்திற்கு,காரோ பைக்கோ அவ்வளுவு தூரம் தனியாக ஒட்டி செல்ல முடியாது.இதை அறிந்த,தியா,ராஜாவை தொடர்பு கொண்டு,அப்பாவை காரில் மும்பை வரை அழைத்து வர முடியுமா,கார் அப்பாவிடம் இருக்கிறது,அவ்வளவு தூரம் அவரால் ஒட்ட முடியாது,நீ தான் ஒட்டி கொண்டு வர வேண்டும்,

மாற்று டிரைவர்கள்,மும்பை என்றால் வர முடியாது என்று தயக்கம் காட்டுகிறார்கள்.மும்பையில் கொரோனா மிக அதிகம்.

ராஜாவும் சரி என்று சம்மதித்து,பைக்கில் சென்னை சென்று,அங்கு இருந்து,காரில் அவரை அழைத்து கொண்டு,பெங்களூர், பூனா,மும்பை என்ற வழி தடத்தில்,இரண்டு நாள் பயணித்து,அவரை பத்திரமாக கொண்டு சேர்த்தான்.வழியில் பல இடங்களில்,சோதனை சாவடிகளை தாண்டி,போவதற்குள் போதும் என்று ஆகி விட்டது.தியாவின் அப்பா சென்றதும்,தியாவின் தாத்தா மகனை பார்த்த திருப்தியில் உயிரை விட்டார்.

அதுற்கு பிறகு,மூன்று வாரம் தங்கி,

எல்லா சடங்குகளை முடித்த பின் ,அவரை அழைத்து கொண்டு சென்னை வந்து சேர்ந்தான்.தியாவின் அப்பா ராஜாவின் கையை பிடித்து அழுது கொண்டு ,இதற்கு பிரதி உபகாரம்

எப்படி செய்வேன் என்று கலங்கினார்.

சார்,இதுவும் எனக்கு ஒரு அனுபவம்,

மேலும் தைரியத்தை கொடுத்தது.

எத்தனையோ பேர் நடந்தும், சைகிலிலும் சொந்த ஊர் சென்றார்கள்.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.இன்னும் உதவி தேவை பட்டால் சொல்லுங்கள் என்று ஆறுதல் கூறி விட்டு சேலத்திற்கு கிளம்பினான்.


Rate this content
Log in

Similar tamil story from Fantasy