தினமும் தீபாவளி
தினமும் தீபாவளி
தினமும் தீபாவளி
மழை பலமாக வர,ஒதுங்க எங்கே இடம் இருக்கு என்று சாலை நடைபாதையில் படுத்து இருந்த
சோமு தேட தொடங்கினான்.
அப்படி தேடிக்கொண்டு அருகில் இருந்த பள்ளியின் காவலரை சற்று நேரம் பள்ளி திண்ணையில் ஒதுங்க
முடியுமா என்று கெஞ்சி கிகொண்டு இருந்தான்.
இரண்டு நாட்களுக்கு புயல் மழை பெய்யும்,பள்ளிகள்,திருமண மண்டபங்கள்,ஆதரவற்ற மக்களை தங்க வைக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்து இருந்தது.
அதனால் அந்த காவலர்,சற்றும் தயங்காமல்,கதவை திறந்து விட சோமு உள்ளே சென்றான்.
உயர்ந்த வாசப்படி,முகப்பில் இந்த பள்ளி கட்டிடத்தை கட்டி கொடுத்தவர் என்ற வாசங்களுடன் ஒரு பெண்ணின் படம் போட்டு இருந்தார்கள்.
சோமுவிற்கு அது மிகவும் பரிச்சயமான முகம் தான்.அந்த முகத்தின் சொந்தக்காரி அவனுக்கு நன்கு அறிமுகம் ஆன முகம் தான்.
தினமும் அந்த முகத்தில் கண் விழித்த பார்த்த நாட்களை எண்ணி பார்த்து கொண்டான்.
எது சதி செய்தது.அந்த முகத்தை விட்டு பிரிந்து ஒரு பிச்சைக்காரன் ஆக வாழ்க்கையை ஒட்டிக்கொண்டு இருக்கிறான்.
அந்த படத்தில் உள்ளது அவன் மனைவி தான்.அவளுடைய பெயரில் அந்த மாநிலம் முழுவதும் பள்ளிகள் மருத்துவமனை என்று தர்மமாக கட்டிக்கொடுத்தது நினைவிற்கு வந்தது.வந்து என்ன பயன்.
அதை அனுபவிக்க தன்மானம் இடம் கொடுக்கவில்லை.
அவனும் ஒரு வசதியான குடும்பத்தில் பிறந்தவன்.வீட்டில் தினமும் தீபாவளி தான்.தினமும் விருந்து தான்.தினமும் உறவினர் கூட்டம்.இப்படி போய் கொண்டு இருக்கும் போது அவனுக்கு திருமண ஏற்ப்பாடு நடந்தது.பக்கத்து ஊரில் இருந்த பெரும் செல்வந்தர்,தன்னுடைய ஒரே மகளுக்கு,வீட்டோடு மாப்பிள்ளை வேண்டும் என்று சோமுவை மாப்பிள்ளையாக ஏற்றுக்
கொண்டார்.
திருமணம் ஆகி ஆறு மாதங்கள் ஓடி விட்டது.ஏதோ ஒரு காரணத்தை சொல்லி தன் மனைவியுடன் சேர்ந்து உறங்குவதை தவிர்த்து வந்தான்.
ஒரு நாள் உண்மை தெரியாமல் போய் விடுமா,மனைவி தன்னை ஏமாற்றி விட்டீர்கள் என்று சண்டை போட்டாள்.என்ன பயன்.
அதற்கு பிறகு பெயரளவில் கணவன் மனைவியாக வாழ்ந்து வர,இந்த உண்மை மாமனாருக்கு தெரியாது.குழந்தை வரம் வேண்டி ஊர் முழுவதும் பள்ளி,மருத்துவமனை என்று தன்னுடைய மகள் பெயரில் கட்டிக்கொடுத்தார்.
இந்த காலத்தில் சோமுவின் அப்பாவிற்கு வியாபாரத்தில் இழப்பு ஏற்பட,சோமுவின் பங்கை அந்த கடனுக்கு ஈடாக கொடுக்க வேண்டி வர,சோமு மானார் வீட்டை விட்டால் வேறு கதியில்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.
இந்த வேதனையில் இருக்கும் போது,ஒரு நாள் இரவு,மனைவியின் அறையில் இருந்து ஒரு ஆண் அவசரமாக வெளியில் வருவதை கவனித்தான்.அவன் மனதில் ஏதோ சந்தேகம் வர,அடுத்த நாள் காலை மனைவியிடம் அதை பற்றி கேட்க,அவளும் எதற்கு மூடி மறைக்க வேண்டும்,எனக்கு ஒரு குழந்தை வேண்டும்,நீ தான் ஆம்பிளை இல்லையே,அது தான் என்று கூறி விட,சோமு கூனிக்குறுகி போய் விட்டான்.
சொல்லி இருந்தால் விவாகரத்து கூட செய்து இருக்கலாமே என்று அவளிடம் அழாத குறையாக கேட்க,
யாராவது கேட்டால் உன்னுடைய மானம் தான் போகும்.இப்போதும் உன் மானத்தை காப்பாற்ற தான்
இதை செய்தேன்.இனி செய்ய மாட்டேன் என்று அவள் கூறினாலும்.
போன கௌரவம் போனது தான்.
மனைவி தன்னை ஆம்பிளையா
என்று கேட்ட பிறகு உயிர் இருந்தென்ன பயன்,என்று ஒரு வாரத்திற்கு தேவையான துணி,பணம் எடுத்து கொண்டு வீட்டை விட்டு வெளியேறி வெகு தூரம் சென்று விட்டான்.
வருடங்கள் ஓடி விட்டன.அவளுக்கு பிறந்த பையனுக்கும் திருமணம் ஆகி விட்டது என்று கேள்வி பட்டு இருந்தான்.பணம் இருந்தவரை வசதியாக தினமும் தீபாவளி கொண்டாடி விட்டு இப்போது ஒரு வேளை உணவுக்கு பிச்சை எடுக்கும் நிலையில் இருக்கும் அவன்,அவசரப்பட்டு விட்டோமோ.
அவள் கேட்டது ஒன்றும் தவறு இல்லை.நியாயம் தானே.தன்னை இழிவு படுத்தும் நோக்கில் அவள் நடந்து கொண்டதே கிடையாது.
இருந்தாலும் தன்மானம் அதை விட்டுக்கொடுக்க முடியுமா.தன்னை போல பல பேர் இருக்கத்தான் செய்வார்கள்.தெரிந்தவரை இவனை மாதிரி யாரும் வீட்டை விட்டு வந்த மாதிரி தெரியவில்லை.
அவளுக்கு பிறந்த குழந்தைக்கு அவனுடைய பெயரை தான் தகப்பன் பெயராக சொல்லி இருந்தாள் என்றும் கேள்வி பட்டான்.
அதில் அவனுடைய மானமும் அவளுடைய மானமும் அடங்கி இருப்பதை எண்ணி சிரித்துக்கொண்டு மழை நிற்குமா என்று வானத்தை ப்பார்த்தான்.
