STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

5  

Vadamalaisamy Lokanathan

Abstract

தேடி தேடி.....

தேடி தேடி.....

6 mins
447

தேடி தேடி..

கோயமுத்தூர் நகரத்தின் நுழைவாயில் என்று கருதப்படும்,சின்னியம் பாளயம் ஊரில்நெடுஞ்சாலை ரோட்டை ஒட்டி உள்ளே ஒரு சந்துக்குள்,

பத்துக்கு இருபது கணக்கில் உள்ள இடத்தில் ஒரு ஷெடில் பத்து பெண்கள் மும்முரமாக வேலை பார்த்து கொண்டு இருந்தார்கள்.

அது ஒரு கூரியர் நிறுவனத்தின் ஏஜென்ட்.அதன் உரிமையாளர் கல்யாணி அந்த ஷெடின் மூலையில் இருந்த சிறு அறையில் அமர்ந்து இன்னும் டெலிவரி ஆகாத பார்சல் எவ்வளவு தேங்கி கிடக்கு,அதை டெலிவரி செய்ய அதை வாங்க வேண்டிய நிறுவனங்களுக்கு போன் செய்து பேசி கொண்டு இருந்தாள்.

"சார் இன்னைக்கு அனுப்புகிறேன்,இன்றைக்கு டெலிவரி எடுக்கா விட்டால் நீங்க தான் எங்க ஆபிசுக்கு வந்து வாங்க வேண்டும்"என்று அதட்டும் குரலில் பேசி கொண்டு இருந்தாள்.


அவர்கள் பதிலுக்கு சந்தேகம் கேட்க,பிரபல திருமண மண்டபத்தில் அருகில் தன்னுடைய அலுவலகம் இருப்பதாக பதில் கூறி கொண்டு இருந்தாள்.

கல்யாணி இந்த ஏஜென்சி எடுத்து கூரியர் வாங்கவும்,டெலிவரி கொடுக்கவும் செய்து கொண்டு இருந்தாள்.

 கடந்த ஐந்து வருடங்களாக இதை செய்து கொண்டு இருக்கிறாள்.

வேலைக்கு ஆதரவற்ற பெண்கள் அல்லது திரு நங்கைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செய்து கொண்டு இருந்தாள்.இப்போது இந்த இடம் அவளுக்கு சொந்தமானது.

கூட ஒரு பழைய காருக்கும் உரிமையாளர்.தாமதம் ஆனால் பெண்களை தன்னுடைய காரில் கொண்டு சென்று அவர்கள் வீட்டில் விட்டு வருவாள்.

அவளுக்கு வயது இப்போது நாற்பது.திருமணம் வேண்டாம் என்று முடிவு செய்து, கூட வயதான அம்மா மட்டும்.அவளை பற்றி சொல்ல வேண்டுமானால் அதுவே ஒரு சிறு கதையாக மாறி விடும்.

ஒரு நேரத்தில் அவளை அனாதையாக விட்டு விட்டு பெற்றோர்கள் அவளை விட்டு பிரிந்து சென்று விட்டார்கள்.பல வருடங்கள் தேடிய பிறகு தன்னுடைய அம்மாவை ஒரு முதியோர் காப்பகத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்து வீட்டில் வைத்து கவனித்து கொள்கிறாள்.

பள்ளி பருவத்தில் அவளுக்கு ஒரு பெண் எப்படி அடக்கமாக இருக்க வேண்டும் என்று யாரும் சொல்லி கொடுக்கவில்லை.

ஒரு நாள் பக்கத்து வீட்டு அக்கா சினிமாவுக்கு போகிறேன் கூட வருகிறாயா என்று கேட்க அவளும் சினிமா பார்க்கும் ஆசையில் அவளுடன் செல்ல,சினிமா கொட்டகையில் இருந்து பாதியில் அந்த அக்கா வெளியேறி அவளுக்கு தெரிந்த ஒரு ஆணுடன் ஒரு வண்டியில் செல்ல,இவளை தெரிந்த வேறு ஒரு பெண்ணுடன் வீட்டிற்க்கு போக சொல்ல,அந்த அக்கா வீடு தூரமாக இருப்பதால்,தனியாக வீடு திரும்ப பயமாக இருக்கு நான் உங்களுடன் வருகிறேன் என்று அந்த அக்கா வுடன் வண்டியில் சென்றாள்.


இரவு ஒன்பது மணி இருக்கும்.

வண்டியில் அந்த ஆணுடன் பக்கத்து வீட்டு அக்காவும் இவளும்,கொஞ்ச தூரம் சென்றதும் ஒரு கரும்பு

 தோட்டம் வர,அங்கு வண்டியை நிறுத்தி விட்டு அந்த ஆணுடன் அந்த அக்கா கரும்பு தோட்டத்தின் உள்ளே செல்ல,இவள் வெளியில் காத்து இருந்தாள்.

இவளை விட்டு ஒரு பத்தடி தூரத்தில் அவர்கள் இருவரும் தங்கள் வேலையை முடித்து விட்டு வர,மீண்டும் திரும்ப வீடு நோக்கி பயணித்து கொண்டு இருந்தார்கள்.

இவள் அந்த அக்காவிடம் உள்ளே என்ன செய்தீர்கள் சொல்லு அக்கா என்று நச்சரிக்க,அவளும் நீ சின்ன பிள்ளை  பேசாமல் வா என்று சொல்லி கொண்டு வர,இவளோ நானும் பெரிய மனுஷி தான் சொல்லக்கா என்று கூற,அந்த ஆண்,நான் உனக்கு நாளைக்கு சொல்லி தருகிறேன்,

ஏழு மணிக்கு விநாயகர் கோவிலுக்கு வா என்றான்.பேசாம வண்டியை ஒட்டு என்று அவனை கடிந்து கொண்டு,இவளிடம் அவனை நம்பி போய் விடாதே உன்னை கெடுத்து விடுவான்,

சொல்வது புரிந்ததா என்று கேட்டாள்.

இவளோ பதில் பேசாமல்,அந்த ஆண் சொன்னதை நினைவில் வைத்து கொண்டு,அடுத்த நாள் விநாயகர் கோவில் அருகில் காத்து நிற்க,அவன் வந்து இவளையும் கரும்பு தோட்டத்திற்கு 

அழைத்து சென்றான்.

ருசி கண்டவன் விடுவானா,நேரம் கிடைக்கும் போது இவளை பயன்படுத்தி கொள்ள,இவள் வயிற்றில் குழந்தை வளர தொடங்கியது.

அதற்கு பிறகு அவன் எங்கு சென்றான் என்று யாருக்கும் தெரியாது.

நாட்கள் செல்ல தான்,அவளுடைய பெற்றோருக்கு தன் மகள் செய்த தவறு தெரிய எல்லாமே கை மீறி போய் விட்டது.ஊருக்குள் தெரிந்தால் மானம் போய் விடும் என்று பக்கத்தில் ஒரு நகரத்திற்கு சென்று,தங்கி,அரசாங்க மருத்துவ மனையில் பிரசவம் பார்க்க அனுமதித்தார்கள்.

அங்கு இருந்த நர்ஸ் இவர்களின் நிலமையை புரிந்து கொண்டு,

குழந்தை பிறந்தால் விற்று விடலாம் என்று அச்சாரமாக ஒரு தொகையை கொடுக்க, குடிகார அப்பன் பணத்தை வாங்கி கொண்டு செல்ல,அந்த தாய் மட்டும் மகளுடன் இருந்தாள்.

ஒரு அழகான ஆண் குழந்தை பிறக்க ,அதன் தாய் கல்யாணி அது கூட தெரியாமல் மயக்கத்தில் இருக்க,அந்த நர்ஸ் குழந்தையை எடுத்து கொண்டு, கல்யாணி யின் அம்மா கையில் கொஞ்சம் பணத்தை கொடுக்க,அவளும் 

கல்யாணி கண் திறந்ததும் குழந்தை இறந்து விட்டது என்று ஒரு. பொய்யை சொல்ல,

அவளும் நம்பி விட்டாள்.


இரண்டு நாள் கழித்து இருவரும் வெளியில் வந்து எப்போதும் போல கூலி வேலை செய்து பிழைக்க ஆரம்பிக்க, தன் மகள் மீது மீண்டும் பலரது பார்வை பட, அவளை அருகில் உள்ள ஒரு ஆதரவற்ற காப்பகத்தில் சேர்த்து படிக்க வைத்தாள்.

கல்யாணி அங்கு பணி செய்து கொண்டு படிக்க ஆரம்பித்தாள்.

வளர்ந்து சுயமாக சம்பாதிக்கும் அளவிற்கு தன் திறமையை வளர்த்துக் கொண்டாள்.

நடுவில் திரும்ப தன் தாயை தேடி குடிசை பக்கம் போக,இவர்களின் குடிசை எரிந்து சாம்பல் ஆகி கிடந்தது.பத்து குடிசைகள் பக்கம் எரிந்து போய் இருந்தது,யாரும் உயிர் பிழைக்கவில்லை என்று கூறி விட்டார்கள்.ஆதரவாக இருந்த அம்மாவும் இல்லை என்று அழுது கொண்டு இருந்தாள்.

பக்கத்தில் இருந்த ஒருவர்,இந்த குடிசையில் யாரும் இருக்கவில்லை,

கடந்த பத்து நாட்கள் இது காலியாக இருந்தது என்று கூறினார்கள்.

அப்போ அம்மா உயிருடன் தான் இருக்க வேண்டும் என்று அக்கம் பக்கம் தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

கல்யாணியின் அம்மாவிற்கு உடல்நலம் பாதிக்க்பட்டு அரசாங்க மருத்துவமனையில் சேர,அங்கு இருந்து மேல் சிகிச்சைக்கு பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பி குண படுத்தி,ஆதரவாக யாரும் இல்லாததால்,ஒரு காப்பகத்தில் சேர்த்து விட்டார்கள்.

வருடங்கள் ஓட கல்யாணி அம்மாவை தேடி ஒவ்வொரு காப்பகமாக அலைய ஒரு காப்பகத்தில் தன் தாய் இருப்பது தெரிந்து அங்கு இருந்து அவளை மீட்டு கொண்டு வந்து தன் வீட்டில் வைத்து பராமரித்து வருகிறாள்.

கல்யாணி தான் படித்து வளர்ந்த காப்பகத்தில் உள்ள பெண்களுக்கு வேலை கற்று கொடுத்து,சுயமாக சம்பாதிக்கும் அளவிற்கு உதவி செய்து கொண்டு இருந்தாள்.

அப்படி வந்தது தான் இந்த கூரியர் ஏஜென்சி.

தன் தாயை நன்கு பராமரிக்க,

அந்த தாய்கொஞ்சம் நினைவு திரும்பி யோசித்து பார்க்க,

கல்யாணியின் குழந்தையை விற்றது பணம் வாங்கியது நினைவிற்கு வர,அதை தன் மகளிடம் சொல்ல,அதை கேட்ட கல்யாணி பதட்டம் அடைந்தாள்.

குழந்தை இறந்து விட்டது என்று தானே அம்மா சொன்னதாக நினைவு.இப்போது குழந்தை அதுவும் ஆண் குழந்தை சாகவில்லை என்று கேட்டு அவளுக்கு மகிழ்ச்சி தலை கால் புரியவில்லை.ஆனால் 25 வருடங்களுக்கு முன்பு நடந்தது.எப்படி அந்த குழந்தையை அடையாளம் காண முடியும்.

இப்போது அது யாரிடம் வளர்ந்து வருகிறது.உயிரோடு இருக்கா,

யாரை கேட்டால் தெரியும்.

உண்மை தெரிந்த ஒரே ஆள் அந்த நர்ஸ்.அவங்களை எப்படி கண்டு பிடிப்பது.அப்படியே கண்டு பிடித்தாலும் குழந்தைக்கு என்ன அடையாளம்.

கல்யாணி இப்போது மிகவும் குழம்பி விட்டாள்.ஒரு பற்று இல்லாமல் தான் வாழ்க்கையை ஒட்டி வந்தாள்.ஆதரவு இல்லாத பெண்களை பாது காப்பது ஒரு அரிய சேவை என்று செய்து வருகிறாள்.


இப்போது அவளுக்கு பணத்தின் மீது ஆசை வந்து விட்டது.

வங்கிக்கு ஓடினாள்,கையில் இருப்பு என்ன என்று அவசரமாக சரி பார்த்தாள்.

யாருக்கு கடன் கொடுத்து இருக்கிறோம் என்று கணக்கு பார்த்தாள்.

மொத்தத்தில் இருபது லட்சம் கையில் இருந்தது.அம்மாவை துருவி துருவி கேட்ட போது சூலூர் அரசாங்க ஆஸ்பத்திரியில் சேர்த்து பிரசவம் பார்த்ததாக அம்மா சொல்ல,காரை எடுத்து கொண்டு சூலூர் அரசாங்க ஆஸ்பத்திரிக்கு சென்று, அங்கு உள்ளவர்களிடம் விசாரிக்க,ஒரு வயதான அம்மா கூட்டி பெருக்கி கொண்டு இருப்பார்கள்,

அவர்களை கேளுங்கள் என்று கூற,அந்த அம்மாவை தேடி பிடித்து கேட்க,அந்த காலத்தில் இரண்டு நர்ஸ்கள் இருந்தார்கள்.பக்கத்தில் தான் அவர்கள் வீடு என்று அடையாளம் காட்ட,அங்கு ஓடினாள்.

நல்ல வேளை இருவருமே அங்கு இருந்தார்கள் ஆனால் இருவருக்கும் வயது 75 கடந்து இருந்தது.

அந்த இருவருக்கும் இதில் பங்கு இருந்தது.கல்யாணம் ஆகாத பெண்கள் பிரசவிக்கும் போது,அவர்களை மூளை சலவை செய்து குழந்தையை வேறு யாருக்காவது பணத்தை வாங்கி கொண்டு கொடுத்து வந்தார்கள்.

அந்த இருவரையும் பிடித்து விசாரிக்க,தன்னுடைய பெயர்,அம்மா பெயர்,சொந்த ஊர் பெயர் சொல்ல,அதில் ஒருத்தி,அது தான்,வலது கையிலும் காலிலும் ஆறு விரல்களுடன் பிறந்த குழந்தையா தான் இருக்குமென்று ஒருவர் சொல்ல மற்றவரும் அதை ஆமொதிக்க,யாருக்கு கொடுத்தோம் என்று யோசிக்க தொடங்கினார்கள்.

அந்த குழந்தைக்கு பிறகு அது மாதிரி சம்பவம் வேறு நடக்கவில்லை.ஆஸ்பத்திரி பெரிதாகி ஆட்கள் அதிகம் வந்து விட்ட காரணத்தால்,அந்த இரு பெண்களும் அந்த வியாபாரத்தை அத்துடன் நிறுத்தி கொண்டார்கள்.


வெகு நேரம் யோசித்து விட்டு,இன்னார் வாங்கி கொண்டு போனார்கள் என்று,அவர்கள் இருப்பிடத்தை மட்டும் சொன்னார்கள்.கல்யாணி காரை கிளப்பி அந்த பெண்கள் சொன்ன இடத்தை நோக்கி விரைந்தாள்.

அவினாசி சாலை நோக்கி செல்லும் பாதையில் முத்து கவுண்டன் புத்தூர் என்னும் இடத்திற்கு சென்று விசாரிக்க,சம்பந்த பட்டவர்கள் இறந்து விட்டதாகவும்,ஆனால் அவர்கள் குழந்தையை தத்து எடுத்து வளர்த்தி வந்ததை சரியாக அந்த ஊர் மக்கள் சொன்னது அவளுக்கு சிறிது நம்பிக்கை தந்தது.

ஆனால் இப்போது அந்த குடும்பத்தில் யாரும் அந்த ஊரில் இல்லை. தோட்டம் காடு எல்லாமே விற்று விட்டு அந்த வளர்ப்பு பையன் சென்னைக்கு சென்று விட்டதாக சொன்னார்கள்.

சென்னை எவ்வளவு பெரிய நகரம்,அங்கு எப்படி தேடி கண்டு பிடிப்பது என்று யோசிக்க தொடங்கினாள் கல்யாணி.

இன்னும் ஒரு தகவல் அவளுக்கு சிறிது நம்பிக்கை கொடுத்தது.

இறந்து போன அந்த தம்பதியின் சிதிலம் அடைந்து வீடு ஒன்று இருந்தது,அதை வாங்க ஒருவர் விற்பனை ஒப்பந்தம் அந்த பையனுடன் போட்டு இருக்கிறார்.

எப்படியும் கிரயம் செய்து கொடுக்க,அவன் அந்த ஊருக்கு நிச்சயம் வருவான்.அப்போது பார்த்து விடலாம் என்று தகவலை சொன்னார்கள்.அந்த அளவிற்கு விவரம் சேகரித்து கொண்டு வீட்டிற்கு திரும்பினாள்.

சரி அப்படியே அவனை கண்டு பிடித்தாலும்,தான் தான் அவனை பெற்ற அம்மா என்று எப்படி நிரூபிப்பது.அவனுடைய கை கால் விரல்களை வைத்து அவனை கண்டு பிடித்து விடலாம். ஆனால் தன்னை அவனுக்கு எப்படி….என்று யோசனையில் மூழ்கினாள்.


ஒரு வாரம் போனது,அப்போது ஒரு நாள், ஒரு இளம் வயது வாலிபன் ஒரு மினி லாரியுடன் கூரியர் அலுவலகம் முன்னாடி வந்து நின்று கொண்டு வண்டியில் இருந்து எதையோ இறக்கி கொண்டு இருக்க,என்ன சத்தம் என்று கேட்டு கொண்டு,அலுவலக அறையை விட்டு வெளியில் வந்து பார்க்க,அந்த இளைஞன் அந்த வண்டியில் இருந்த ஒரு மர கட்டிலை காண்பித்து அதை சென்னைக்கு அனுப்ப முடியுமா என்று கேட்டான்.

அதற்கு கல்யாணி இங்கு சிறு பார்சல் மட்டும் ஏற்று கொள்கிறோம்.நீங்கள் விருப்ப பட்டால் அதை ஒரு லாரியில் அனுப்பி சென்னையில் டெலிவரி கொடுக்க ஏற்பாடு செய்கிறேன் என்று அவனை பார்த்து கூற,அவனும் சரி அப்படியே செய்யுங்கள், என்று கூறி விலாசம் எழுதி தர ஒரு பேப்பர் கேட்டான்.

அவன் அதை எழுதி கொண்டு இருக்கும் போது தான் கல்யாணி அவனுக்கு வலது கையில் ஆறு விரல் இருப்பதை.அதை கவனித்து விட்டு அவனிடம் நீங்க முத்து கவுண்டன் புத்தூர் கிராமத்தை சேர்ந்தவரா என்று கேட்டாள்.அவனும் தலையை ஆட்டி ஆமாம் என்று சொன்னான்.

அவனிடம் மேலும் விவரங்களை கேட்க,அவன் பெற்றோர் பெயர்,வீடு விற்பது போன்ற விவரங்கள் கூற,அவனிடம்,அம்மா பெயரை மீண்டும் கேட்க,அதற்கு என்னை பெத்த அம்மா பெயர் தெரியாது.

நான் வளர்ப்பு பிள்ளை என்று மட்டும் என் அம்மா இறக்கும் போது தெரிந்து கொண்டேன்.

அதுவும் அம்மா இறக்கும் தருவாயில் தான் சொன்னார்கள்.

ஒரு நர்ஸ் பெயரை சொல்லி முடிந்தால் அந்த அம்மாவை கேட்டால் தன்னை பெற்ற அம்மா யாரென்று தெரியும் என்று கூறி விட்டு இறந்து விட்டார்கள்.அதற்கு பிறகு என்னால் அந்த நர்சை தேடி கண்டு பிடிக்க முடியவில்லை.

தான் போன போது அந்த நர்ஸ் வெளியூர் சென்று இருப்பதாக சொல்லி விட்டார்கள் என்று தன் நிலைமையை விளக்கி சொல்ல,அவனிடம் நான் தான் உன்னை பெற்ற அம்மா என்று சொல்ல வார்த்தைகள் நாக்கு நுனி வரை வந்து விட்டது.

ஆனாலும் சொல்லாமல் நிறுத்தி கொண்டாள்.அம்மாவை தேடும் போது அப்பாவையும் தேடுவான் அல்லவா.யாரை அவனுக்கு அப்பா என்று காண்பிப்பது.

தனக்கே அவனுடைய முகம் மறந்து விட்டது.

தன்னை அம்மா என்று ஏற்று கொண்டால் நிச்சயம்,அப்பாவை பார்க்க வேண்டும் என்று கேட்டால் இனி அப்பாவை எங்கு தேடி கண்டு பிடிப்பது.

போதும் யாரை பார்க்க உள்ளம் ஏக்கம் கொண்டதோ அவனை இன்று நேரில் பார்த்து விட்டாள்.இப்போது அவனிடம் உன் அப்பா பெயர் தெரியாது என்று எப்படி சொல்வது.

போதும் தேடலுக்கு விடை கிடைத்து விட்டது.

இனி விரும்பும் போது அவனை சென்று சந்திக்கலாம்.ஆனால் என்ன உறவை சொல்லி அவனை சந்திக்க முடியும்.

உடனே அவனை பார்த்து,

நிரந்தரமாக எங்கு தங்கி உள்ளான் என்று கேட்டாள்.

அவனும் வெகுளியாக தன்னுடைய விலாசத்தை கொடுத்து சென்னை வந்தால் தவறாமல் என்னை பாருங்கள் என்று கேட்டு கொண்டான்.

கல்யாணி தன் மகனை பார்த்த மகிழ்ச்சியில் மிகவும் பரவசபட்டு இருந்தாள்.அவனிடம் தன்னுடைய வீடு அருகில் தான் உள்ளது வந்து ஒரு காபி சாப்பிட்டு விட்டு போகலாமே என்று கேட்க அவனும் மகிழ்ச்சியுடன் வந்து காபி சாப்பிட்டான்.

கல்யாணி யை பார்த்து அவன் உங்களை அம்மா என்று கூப்பிடலமா

என்றான்.

கல்யாணி தன்னுடைய அம்மாவிடம் உன் பேரன் வந்து இருக்கிறான் பாரு என்று சொல்லி கொண்டு இருந்தாள்.

முற்றும்…



Rate this content
Log in

Similar tamil story from Abstract