STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Abstract

4  

Vadamalaisamy Lokanathan

Abstract

ராணுவம்

ராணுவம்

2 mins
325

ராணுவம்


ஒரு நாட்டின் எல்லைகளை காக்க

ஒவ்வொரு நாடும் இராணுவ படையை ஏற்படுத்தி வருடா வருடம் ஒரு பெரிய தொகையை செலவு செய்து வருகிறது.

அது மட்டும் அல்ல நாட்டு மக்களும் இராணுவத்தில் சேர்ந்து பெரும் பங்கு ஆற்றி வருகிறார்கள்.

செங்கோடன் இராணுவத்தில் பணி ஆற்றி வருகிறார்.அவருடைய தாத்தா காலம் தொட்டு இன்றுவரை அவர் குடும்பத்தில் இருந்து யாராவது ஒருவர் இராணுவத்தில் இருப்பார்கள்.


செங்கோடன் இராணுவத்தில் சேர்ந்து இருபது வருடங்கள் ஆகி விட்டது.திருமணம் ஆகி இரண்டு பெண் குழந்தைகள்.அவருக்கு இனி யார் நாட்டிற்கு சேவை செய்ய போகிறார்கள்.பெண்களை படிக்க வைத்துள்ளார்.மூத்தவள் பன்னிரெண்டாம் வகுப்பு ,இளையவள் பத்தாவது.மனைவி ஆசிரியை.அவளுக்கு இன்னும் பத்து வருடம் பணி புரியலாம்.


செங்கோடன் பணத்தை பற்றி கவலை பட வில்லை.அவருக்கு பிறகு யார் நாட்டிற்க்கு சேவை செய்வார்கள் என்பது தான்.பெண்களும் இராணுவத்தில் பல பிரிவுகளில் பணி புரிகிறார்கள்.

டாக்டர், நர்ஸ்,பள்ளிகூட ஆசிரியர் இப்படி.


பெண்ணை டாக்டர் அல்லது நர்ஸ் வேலைக்கு படிக்க சொல்லலாம்.

கண்டிப்பாக அது சார்ந்த வேலை இராணுவத்தில் கிடைக்கும்.ஆனால் மனைவி என்ன மன நிலையில் இருப்பாள் என்று அவருக்கு 

தெரியவில்லை.பிள்ளைகளின் எதிர்பார்ப்பு என்ன என்று இதுவரை கேட்கவில்லை.வரும் விடுமுறைக்கு செல்லும் போது தன் விருப்பத்தை சொல்லி பார்க்கலாம்,குடும்பத்தில் ஒன்று சேர்ந்து எடுக்க வேண்டிய முடிவு.

ராணுவம் இல்லாவிட்டால் விமான படையில் கூட சேரலாம்.அதுவும் இல்லாவிட்டால்,அதிரடி படையில் கூட சேர்ந்து பயிற்சி பெற்று நாட்டிற்காக சேவை செய்யலாம்.

எது எப்படி ஆனாலும் வீட்டில் கலந்து தான் முடிவு எடுக்க முடியும்.


செங்கோடன் மனைவி சரசு ஒரு உடற்பயிற்சி ஆசிரியை.தன்னுடைய இரு பெண்களையும் விளையாட்டு,தடகளம்,தற்காப்பு பயிற்சி என்று நேரம் கிடைக்கும் போது அதில் பயிற்சி கொடுத்து,மன உறுதியை வளர்த்து வந்துள்ளார்.


அவருக்கும் பெண்கள் நாட்டை காக்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று எண்ணம் உடையவர்.

கணவனிடம் சொன்னால் ஏற்று கொள்வாரா என்று தெரியாது.

பெண்களை அனுப்ப சம்மதிப்பாரா என்று யோசனையில் இருந்தார்.

அவர் விடுமுறையில் வரும் போது

இதை பற்றி பேச வேண்டும் என்ற எண்ணம் இருந்தது.


மூத்தவள் திவ்யா, உடற் பயிற்சி மையம் சென்று உடம்பை வலு படுத்தி கொண்டு வருகிறாள்.அவளும்

பரம்பரை பரம்பரையாக அவளுடைய குடும்பம் இராணுவத்தில் பணி புரிவது தெரியும்.தனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதை தவற விட கூடாது

என்கிற எண்ணம் தீவிரமாக இருந்தது அவளுக்கு.அப்பா வந்ததும் தன்னுடைய எண்ணத்தை அவரிடம் கூறி அனுமதி கேட்க வேண்டும் என்று நினைத்து இருந்தாள்.அவளுக்கு திருமணம் குடும்பம் போன்றவற்றில் பெரிய ஆர்வம் இருக்கவில்லை.ஆண்களுக்கு சமமாக பெண்களும் வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தாள்.


மே மாதம் விடுமுறையில் செங்கோடன் ஊருக்கு வந்தார்.வந்ததும் நாட்களை கடத்தாமல்,குடும்பத்தில் கலந்து,தனக்கு பிறகு யாரும் நாட்டிற்கு சேவை புரிய முடியாமல் போய் விடும் என்று கவலையை தெரிவித்தார்.உடனே திவ்யா,தனக்கு சேவை புரிய விருப்பம்,என்ன படிப்பு படிக்க வேண்டும் என்று சொல்லுங்கள் அப்பா என்று கேட்டாள்.


அதற்கு அவர்,எனக்கும் விருப்பம் தான்,உன்னுடைய அம்மா என்ன நினைக்கிறார் என்று தெரியவில்லை என்று கூற,சரசு உடனே எனக்கு விருப்பம் தான்.

திவ்யா நீட் எழுதி மருத்துவம் படிக்கட்டும்,பட்டம் வாங்கிய பின்,இராணுவத்தில் சேர்ந்து பணி புரியட்டும்.செங்கோடன் ஓய்வு பெறும் போது,திவ்யா தன்னுடைய பணியை தொடங்க சரி ஆக இருக்கும்.ஆண்டவன் அருள் சாதகமாக அமைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம் என்று சரசு கூற எல்லோரும் ஒன்று கூடி தங்கள் குல தெய்வத்தை வேண்டி கொண்டனர்.இளைய மகள் வித்தியா அக்கா சேரட்டும்,தானும் இராணுவத்தில் சேர இன்று முதல் முயற்சி எடுத்து கொள்வேன் என்று பெற்றோரிடம் கூறினாள்.

கடவுள் கிருபையால் அவர்கள் எண்ணம் ஈடு ஏறட்டும்.ஒவ்வொரு குடும்பத்திலும் ஒருவர் சேர்ந்தால் நம் நாட்டு ராணுவம் பலம் அடையும்

மக்களும் நலம் பெறுவார்கள்.

ஜெய்ஹிந்த்.வாழ்க பாரதம்.



Rate this content
Log in

Similar tamil story from Abstract