STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Drama

3  

Vadamalaisamy Lokanathan

Drama

ராக்கி

ராக்கி

2 mins
212

ராக்கி


சகோதர உணர்வை,ஒருவருக்கு வெளிப்படுத்தும் செயல் தான் ராக்கி அணிவது.நாடெங்கும் இது ஒரு முக்கிய தினமாக அனுஷ்டிக்க படுகிறது.


திருமுருகன் அந்த கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறான்.

அன்று ராக்கி கட்டும் தினம் அந்த கல்லூரியிலும் மாணவர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.நிறைய மாணவிகள் மாணவர்களுக்கு ராக்கி கட்டி மாணவர்களை ஏமாற்றி கொண்டு இருந்தனர்.காதலை சொல்ல நினைத்த மாணவர்களை ராக்கி கட்டி மாணவிகள் ஏமாற்றியது

மாணவர்களுக்கு பொறுக்கவில்லை.

ஒருவருக்கொருவர் தன்னுடைய

எதிர்பார்ப்புகள் ஏமாற்றம் அடைந்ததை விவாதித்து கொண்டு அவரவர் வகுப்பிற்கு சென்றனர்.


அந்த கூட்டத்தில் திருமுருகன் சென்று கொண்டு இருந்தான்.சக மாணவர்கள் அவன் கையை பார்த்து விட்டு உனக்கு யாரும் ராக்கி கட்டலையா என்று கேட்டு நச்சரித்து கொண்டு இருந்தார்கள்.


அத்தனை பெண்களும் அவனுக்கு கட்டி விட்டு இருந்தார்கள்,அவை அனைத்தும் அவனது பேண்ட் பாக்கெட் உள்ளே இருந்தது.ஆனால் ஒரு பெண் மட்டும் அன்று கல்லூரிக்கு வரவில்லை.என்ன காரணம் என்று தெரியவில்லை. அவளை தான் திருமுருகன் எதிர்பார்த்து இருந்தான்.அவள் மட்டும் ராக்கி கட்ட கூடாது என்று நினைத்தான்.அவள் வராதது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது.


அவனுடைய மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை.அந்த பெண் கிரிஜா வந்து விட்டாள்.வந்த உடனே அவள் திருமுருகன் நிற்பதை பார்த்து நேராக அவனிடம் வந்து அவன் கையில் ராக்கியை கட்டினாள்.அவள் முகத்தில் எந்த சலனமும் இல்லை.கடமையை போல் எல்லார் கையிலும் கட்டி விட்டாள்.


கிரிஜா எல்லோர் கையிலும் கட்டியது எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது.ஏன் அந்த பெண் எல்லோரையும் அப்படி பார்க்க வேண்டும்.சில பெண்கள் மற்றவர் முன்னிலையில் ராக்கி கட்டினாலும் மனதிற்குள் வேறு எண்ணம் ஓடி கொண்டு தான் இருந்தது.சிலர் யாருக்குமே கட்டவில்லை,ஆனாலும் அவர்கள் மனதில் எந்த சலனமும் இல்லை.


கிரிஜா செய்தது எல்லோருக்கும் வியப்பை அளித்தது.அன்று மாலை வகுப்பு முடிந்ததும் கிரிஜாவை பார்த்து உன்னிடம் பேச நினைத்தேன்,ஆனால் ராக்கி கட்டி அதை தடுத்து விட்டாய் என்றான்.

அவளும் உன் எண்ணம் எனக்கு தெரியும்,தெரிந்து தான் உனக்கு கட்டினேன்.என் நிலமை வேறு.உனக்கு புரியாது.இங்கு யாருக்கும் புரியாது.யாருக்கும் புரிய வேண்டியது இல்லை என்று கூறினாள்.



சற்று நேரத்தில் கிரிஜாவின் அப்பா அங்கு வந்தார் அவளை அழைத்து செல்ல காத்து நின்றார்.உடனே அவள் புறப்பட்டு சென்று விட்டாள்.



அவளுக்கு ஒரு குழந்தை இருப்பதும்,அவள் கணவன் இராணுவத்தில் நடந்த சண்டையில் இறந்து போனதும்,அதனால் அவள் வேலைக்கு செல்ல வேண்டி தான் கல்லூரியில் சேர்ந்து படிக்கிறாள்.

கிராமத்தில் பிறந்து வளர்ந்ததால் பிளஸ் டூ முடிந்து 18 வயதில் திருமணம்,அதுவும் உறவுக்கார பையன்.இப்போது அவள் வயது 25,பார்த்தால் யாருக்கும் தெரியாது.

இது தான் அவள் எல்லோர் கையிலும் ராக்கி கட்ட காரணம்.

படித்து முடிக்கும் வரை இது யாருக்கும் தெரிய கூடாது என்பதில் 

உறுதியாக இருந்தாள்.தெரிந்தால் நிறைய பேர் அனுதாபம் காட்டுவார்கள்.ஏற்கவும் முடியாது மறுக்கவும் முடியாது.


இன்னும் ஆறு மாதத்தை ஒட்டி விட்டால் படிப்பு முடிந்து விடும்.அதற்காக காத்து இருந்தாள் கிரிஜா.

முற்றும்.








Rate this content
Log in

Similar tamil story from Drama