STORYMIRROR

Vadamalaisamy Lokanathan

Drama

4  

Vadamalaisamy Lokanathan

Drama

பயணம்

பயணம்

3 mins
243


அலுவலக பணி நிமித்தம்,பாபு .அடிக்கடி வெளியூருக்கு பயணம் மேற்கொள்வது வழக்கம்.அது பெரும்பாலும் இரவு நேர பயணங்கள் ஆக தான் இருக்கும்.

முன்கூட்டியே திட்டம் இட்ட பயணம் என்பதால் அது இரயில் பயணமாக தான் இருக்கும்.

அப்படி ஒரு நாள் டெல்லி வரை சென்று விட்டு,ரெயிலில் திரும்பி சென்னை வந்து கொண்டு இருந்தான்.

அப்போது ஆந்திராவில் ஒரு நிலையத்தில் ஒரு ஆணும் பெண்ணுமாக இருவர் ஏறி அவனுடைய இருக்கைக்கு எதிர்ப்புறம் வந்து அமர்ந்தனர்.

பார்த்தால் இருவரும் புதிதாக திருமணம் செய்து கொண்டவர்கள் போல இருந்தது.

அன்று இரவு பயணம் செய்தால் அடுத்த நாள் காலையில் சென்னை நிலையத்தை அடைந்து விட முடியும்.

ஆனால் வழியில் வேறு ஒரு ரயில் தடம் புரண்ட காரணத்தால்,இரயில் தாமதமாக வந்து கொண்டு இருந்தது.அடுத்த நாள் பகல் முழுவதும் பயணம் செய்தால் மட்டுமே சென்னை சென்று சேர முடியும்.

இரவு நடுநிசியில் ஏதோ சப்தம் கேட்க கண் விழித்து பார்த்த பாபு,எதிரில் இருந்த ஜோடியில் பெண் மட்டும் இருந்தாள்.ஆனால் அந்த ஆணை காணவில்லை.

சரி பாத்ரூம் சென்று இருப்பார் என்று நினைத்து கொண்டு மீண்டும் தூங்க ஆரம்பித்தான்.

விடிய காலை நான்கு மணிக்கு அந்த பெண் லேசான குரலில் அழுது கொண்டு இருப்பதை உணர்ந்து,அந்த பெண்ணிடம் என்ன பிரச்சினை என்று கேட்டால்,அவள் சொன்ன பதில் அவனுக்கு புரியவில்லை.அவன் அந்த மொழியை இது வரை கேட்டது இல்லை.

அங்கு இருந்த வேறு யாருக்கும் அந்த பெண் பேசிய மொழி புரியவில்லை.அதுவரை வராதா,டிக்கட் பரிசோதகர் வந்து புதிதாக ஏறிய பயணிகளின் டிக்கெட் விவரம் பரிசோதிக்க,இந்த பெண்ணிடம் பயணசீட்டு எதுவும் இருக்கவில்லை.ஜோதி என்ற பெயரில் அவளுக்கு டிக்கட் பதிவாகி இருந்தது மட்டும் தெரிந்தது.அடையாள சீட்டை காண்பிக்க சொல்லி கேட்க,அதுவும் அவளிடம் இல்லை.கூட வந்த ஆணிடம் தான் இருந்து இருக்க வேண்டும்,பிரகாஷ் என்ற பெயரில் டிக்கட் இருந்தது.ஆனால் இருவரது டிக்கட்,தனி தனியாக பதிவாகி இருந்தது.

டிக்கட் பரிசோதகர் முயன்றும் அந்த பெண்ணை பற்றிய விவரம் கேட்டறிய முடியவில்லை.பேனாவும் பேப்பரும் கொடுக்க புறியாத மொழியில் ஏதோ கிறுக்கி கொடுத்தாள்.

கிட்ட தட்ட சென்னையை நெருங்கி கொண்டு இருக்கும் நேரத்தில் ஒரு விவரமும் அறிய முடியவில்லை.

கைபேசியை காண்பித்து கேட்டாலும் அவளிடம் அதுவும் இல்லை என்று தெரிந்தது.

அவளுடைய பயண பொருள்கள் இருக்கா என்று பார்த்தாலும்,அதையும் அந்த ஆண் எடுத்து கொண்டு மாயமாகி இருந்தான்.

அவன் என்ன ஆனான் என்று யாருக்கும் தெரியவில்லை.

ஒரு வழியாக சென்னை வந்து இறங்கிய பிறகு,இனி ஒன்றும் செய்வதற்கு இல்லை என்று அந்த பெண்ணை பரிதாபமாக பார்த்து விட்டு பாபு இறங்கி நடக்க தொடங்கினான்.

நாலு எட்டு வைததும் யாரோ சட்டையை இழுப்பது உணர்ந்து திரும்பி பார்க்க,அந்த பெண் குழப்பத்துடன் இவனை பார்க்க வேறு வழி தெரியாமல்,வா என்று சைகை காண்பித்து அழைத்து சென்றான்.

ரயில்நிலையத்தில் வெளியில் வந்ததும்,சரி இவளை என்ன செய்வது,யாரை நம்பி விட்டு செல்வது,அவளோ அவன் கையை பிடிக்காத குறையாக இவனோடு ஒட்டி கொண்டு நிற்க,ஒரு ஆட்டோ பிடித்து,அவளையும் அழைத்து கொண்டு வீட்டிற்க்கு சென்றான்.

அவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.அவனும் அம்மாவும் தான்.அந்த தைரியத்தில் தான் அவளை வீட்டிற்கு அழைத்து சென்று,அம்மாவை பார்த்ததும்,விவரங்கள் சொல்லி இன்று ஒரு நாள் இருக்கட்டும்.நாளை எனக்கு விடுமுறை தான்,அவளை ஒரு ஆசிரமத்தில் கொண்டு விட்டு விடுகிறேன் என்று சொன்னான்.

அம்மாவும் புரிந்து கொண்டு,அவளை உள்ளே அழைத்து சைகயில் குளித்து உடை மாற்று,அப்புறம் உணவு அருந்தலாம் என்று சொன்னதை நன்கு புரிந்து அந்த பெண் தயார் ஆகி வந்தாள்.

அப்புறம் தான் அம்மா சொன்னார்கள் அந்த பெண் வாய் பேசாதவள் என்று.அவனுக்கு,நான் கண்டு பிடிக்க முடியாத விசயத்தை அம்மா கண்டு பிடித்து விட்டார்களே என்று வியப்பில் பார்க்க,அவன் அம்மா சிரித்து கொண்டே,என்னாட அம்மா ஒரு வாய் பேசாத பள்ளி ஆசிரியை என்பதை மறந்து விட்டாயா என்று கேட்டார்கள்.

அம்மா அவளுடன் கேட்டு தெரிந்து கொண்டது,அவன் தன்னுடைய பையை மறந்து விட்டு வந்து விட்டான்,அதை திரும்ப எடுக்க நினைத்து ரெயிலில் இருந்து குதித்து இருக்கிறான்.

அவன் என்ன ஆனான் என்று அவளுக்கு தெரியவில்லை.அவளால் அதை யாரிடமும் சொல்ல முடியவில்லை.இது தான் நடந்தது.அது அவளுடைய கூட பிறந்த தம்பி.இது மட்டும் தான் இப்போதைக்கு தெரிய முடிந்தது.

அடுத்த நாள்,அவளை ஒரு ஆசிரமத்தில் சேர்த்து விட,இரண்டு மாதம் அங்கு தங்கி இருக்க,எதற்கும் முயன்று பார்க்கலாம் என்று அந்த பெண்ணின் புகை படத்துடன் அவள் இருப்பிடத்தை குறிப்பிட்டு ஒரு பத்திரிகையில் விளம்பரம் கொடுக்க,இரண்டு நாள் கழித்து,சென்னை வந்து சேர்ந்த அவளுடைய தம்பி பிரகாஷ்,விளம்பரத்தை பார்த்து தேடி பிடித்து வந்து தன் தங்கையை அழைத்து சென்றான்.


Rate this content
Log in

Similar tamil story from Drama