பணக்காரன்
பணக்காரன்
பணக்காரர்.
ஊரில் பணக்கார வீடு என்றால் அதை செல்வத்தின் வீட்டை தான் சொல்வார்கள்.அந்த ஊரில் பாதிக்குடும்பம் பணக்கார குடும்பம் தான்.செல்வம் அந்த அளவிற்கு பணக்காரன் இல்லை தான்,ஆனால் யார் கேட்டாலும் செல்வம் தான் பணக்காரன் என்று சொல்கிறார்கள்.
செல்வத்திற்கு,ஒரு நான்கு அறைகள் கொண்ட வீடு,ஒரு பெரிய திண்ணையுடன் கூடியது.பெரிய முற்றம்,அதில் ஒரு ஓரத்தில் தென்னை மட்டை வேய்ந்த ஒரு பெரிய கொட்டகை.நல்ல காற்றோட்டம் உள்ள தரையில்,குறைந்தது பத்து பெண்கள் ஏதாவது வேலை செய்து கொண்டு இருப்பார்கள்.வேலை செய்த களைப்பில் உறங்கி கொண்டும் இருப்பார்கள்.தாகம் எடுத்தால் குடிக்க ஒரு மண் சட்டி நிறைய மோர்.உணவு வேலையில் பசியாற உணவு,இது தினமும் நடக்கும் அட்டவணை.
அந்த ஊரில் உள்ள வயதான பெண்மணிகள் காலை பத்து மணிக்கு வந்தால்,செல்வத்தின் மனைவி சுந்தரி பெண்களுக்கு ஏற்ற பணிகள் ஏதாவது ஒன்றை கொடுத்து விடுவாள்.தானியங்கள் சுத்தம் செய்வது,மிளகாய் காயப்போடுவது,விதை நெல் சுத்தம் செய்வது,அரிசி பொருக்குவது என்று வேலைக்கு பஞ்சம் இருக்காது.
வறுமை காரணம் அங்கு வரும் வயதான பெண்மணிகளுக்கு இரவு ஒரு வேலை சாப்பாடு தான் அவர்கள் வீட்டில் கிடைக்கும்.செல்வம் வீட்டிற்க்கு வந்தால் பசியாற சாப்பாடு என்பது உறுதி.
யார் வந்தாலும் இல்லையென்ற பேச்சுக்கு இடமில்லை.
சுந்தரி ஒருத்தியே அத்தனை பேருக்கும் சாப்பாடு செய்து போடுவாள்.
உதவிக்கு வயதான பெண் யாராவது இருப்பார்கள்.பேசிக்கொண்டே அலுப்பு தெரியாமல் வேலை நடந்து முடிந்து விடும்.ஒரு வேளை சாப்பாடு போதுமென்று நினைக்கும் பெண்மணிகள் சில நேரங்களில் அங்கேயே இரவு தங்கி தூங்கி விடுவார்கள்.
மற்ற பணக்காரர் வீடுகளில் கேட்டை தாண்டி உள்ளே கூட செல்ல முடியாது.காவலாளி விரட்டி அடித்து விடுவான்,அல்லது நாய்கள் பாய்ந்து வரும் கடிக்க.பண்டிகை நாட்களில் மட்டும் ஒரு வேளை உணவு கொடுப்பார்கள்.
செல்வம் வீட்டில் பண்டிகைக்கு என்ன சமைத்தாலும் அதே உணவு. எல்லோருக்கும் கிடைக்கும்.
திருமணம் என்று பத்திரிகை கொடுக்க போனால்,தாலிக்கு தங்கம் அல்லது செலவிற்கு பணம் நிச்சயம் கிடைக்கும்.
இதையெல்லாம் செய்ய அவனுக்கு கோடிக்கணக்கில் வருமானம் இல்லை.எப்படியும் கொடுத்து விடுவான்.அவனிடம் இல்லை என்று பதில் வராது.
அதனால் அந்த ஊர் மக்கள் அவனைத்தான் பணக்காரன் என்று சொல்கிறார்கள்.அவன் மனதால் பணக்காரன்,அதனால் உதவி செய்ய எப்படியும் அவனுக்கு பணம் வந்து சேர்ந்து விடும்.
பணத்தை விட அதை கொடுதுதவும் மனம் உள்ளவன் தான் பெரிய பணக்காரன் என்று அந்த ஊர் மக்களுக்கு தெரியும்.
