பேராசை
பேராசை
பேராசை
ஆசை இல்லாத மக்கள் கிடையாது.ஆசையின் அளவு கூடும் போது அது பேராசை ஆகி விடுகிறது.
பணம் சம்பாதிக்க வேண்டும் அதுவும் நாட்களில் என்று தான் இன்று இளைஞர் கூட்டம் அலை மோதுகிறது.அந்த சூழ்நிலையில் தான் நம் கதாநாயகன் சிவராம்.
அவனுக்கு குறுகிய காலத்தில் நிறைய சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் அவனை குறுக்கு வழிகளில் சம்பாதிக்க தூண்டியது.
எல்லோரையும் தூண்டுவது சூதாட்டம்.அது இல்லாத போட்டி எதுவும் இல்லை.அப்படி நினைத்து என்ன போட்டிகளில் கலந்து கொண்டால் வெற்றி பெற முடியும் என்று சிவராம் தீவிரமாக சிந்திக்க தொடங்கினான்.
அன்று ஒரு நண்பன்,தன்னுடைய அலை பேசிக்கு வந்த செய்தியை காண்பித்தான்.அதில் குறைந்த முதலீடு நிறைய லாபம் என்று பல பிரபலங்கள் விளம்பர படுத்தி இருந்தார்கள்.விளம்பரம் என்னவோ அதில் நடித்த அத்தனை
பிரபலங்களும் லட்ச கணக்கில் சம்பாதித்த மாதிரி,ஒரு தோற்றத்தை கொடுத்து இருந்தார்கள்.
அவர்கள் பணம் வாங்கி கொண்டு நடித்து உள்ளார்கள் என்பதை சிவராம் மறந்து விட்டான்.
இன்னும் ஒரு மாதத்தில் தான் ஒரு லட்சாதிபதி என்று கனவு கண்டு,அதன் விவரத்தை தன்னுடைய கை பேசியில் தரவு இறக்கம் செய்தான்.சரி அதில் முதலீடு செய்ய பணம் வேண்டுமே.
எப்படி பணத்தை திரட்டுவது என்று இரவு பூரா யோசித்து,மாத சம்பளத்தில் சேமித்த ரூபாய் ஐம்பது ஆயிரம்,அப்பா வாங்கின விவசாய கடனை அதுவும் கறவை மாடு வாங்க வாங்கின கடனை கட்ட சேர்த்து வைத்த பணம் நினைவிற்கு வந்தது.பத்து நாள் தவணை வாங்கி கொண்டு,போட்டியில் சம்பாதித்து கொடுத்து விடலாம்.
ஆனால் அவன் அப்பா அந்த கடன் தவணையை குறிப்பிட்ட தேதியில் கட்டவில்லை என்றால்,மாடுகளை திரும்ப எடுத்து கொண்டு போய் விடுவார்கள்,அப்புறம் அன்றாடம் சிலவிற்கே அவதி பட வேண்டும்.
அத்தனையும் சிவராம் தெரிந்து தான் வைத்து இருந்தான்.பணம் சம்பாதிக்கும் பேராசை ,ஒரு தடவையில் போட்ட பணத்தை விட அதிகம் சம்பாதித்து விடலாம், என்று தீவிரமாக எண்ண தொடங்கினான்.கூடவே இதை இவனுக்கு அறிமுக படுத்திய நண்பன்,உற்சாகம் தர,நாளைக்கு நல்ல நாள் ஆரம்பித்து விட வேண்டும்,அல்லாமல் வேலைக்கு விடுமுறை, ஆற அமர பந்தயம் கட்டி பார்க்கலாம் என்று எண்ணி கொண்டு உறங்க சென்றான்.இதை அறிமுக படுத்திய நண்பன் சிவராம் வெற்றி பெறுவான் அல்லது பணத்தை இழப்பான்,அதை தெரிந்து கொண்டு அவன் ஆட்டத்தை ஆரம்பிக்க நினைத்தான்.அவனுடைய சூது வலையில் சிவராம் பணத்தை சம்பாதிக்க போகிறான் இல்லை இழக்க போகிறான்.பொறுத்து இருந்து பார்த்தால் தெரியும்.
அடுத்த நாள், காலையில் காப்பியை மட்டும் குடித்து விட்டு,போனுக்கு இணைய வசதி விடுபட்டு போகாமல் இருக்க அதற்கு ஒரு இருநூறு ரூபாய் கட்டினான்.போனை gpay தளத்தில் இணைத்தான்.
எல்லாம் தயார் ஆனதும் ஐநூறு ரூபாய் கட்டி ஆட்டத்தை ஆரம்பிக்க,முதல் சுற்றில் போட்ட பணத்தை லாபமாக எடுத்தான்.
இரண்டாம் சுற்றில் போட்டதில் பாதியை இழந்தான்.மூன்றாவது
முறை போட்ட பணத்தை போல ஒரு மடங்கு லாபம் பெற்றான்.மூன்று முறையும் சிறு தொகை கட்டி விளையாடினான்.
நான்காவது முறை நாற்பது ஆயிரம் கட்டினான்.அதை முற்றிலும் இழந்தான். மீதி இருந்த பத்தாயிரம் ரூபாய்.மீண்டும் கொஞ்சம் கொஞ்சமாக கட்ட,இரு முறை வர,கடைசியில் எல்லா பணமும் போய் விட்டது.பேராசை பெரு நஷ்டம்
என்று தெரியாமலா சொன்னாங்க.
நண்பன் கடன் வாங்கி மீண்டும் ஆடி பார்,ஒரு வேளை லாபம் வரலாம் என்று ஆலோசனை கூற.,பெற்றோருக்கு இனி எப்படி பணம் கொடுப்பேன் என்று மனம் வருந்தி,தற்கொலை செய்து கொள்ள ஏதோ ஒன்றை குடிக்க,யாரோ பார்த்து அவனை மருத்துவமனையில் சேர்த்தார்கள்.
ஊடங்கள் வந்து அவனிடம் வந்து விசாரித்து சென்றார்கள். போன பணம் இனி கிடைக்க வா போகிறது,
ஊடங்ககள் வந்து கேட்ட போது,யாரும் இதை நம்பி ஏமாந்து விட வேண்டாம்.உழைத்து தான் சம்பாதிக்க முடியும்,சூதாடி சம்பாதிக்க முடியாது.எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.இப்போது என்னிடம் மீதி உள்ளது என் உயிர் மட்டும் தான்.
முற்றும்.
