பச்சை
பச்சை
பச்சை
கபிலனுக்கு இயற்கையோடு ஒன்றி வாழ விருப்பம்.கண் குளிர பசுமையை பார்த்து ரசிக்க விரும்புவான்.
ஆனால் அவன் இப்போது வேலை செய்வது அரபு நாட்டில்.ஒரு செடி கூட கண்ணுக்கு தெரியாத பாலைவனத்தில் பணி செய்து வந்தான்.
இன்னும் இரண்டு ஆண்டுகள்,அத்தோடு பணி ஒப்பந்தம் முடிந்து விடும்.அதற்கு
பிறகு தாய் நாட்டிற்க்கு திரும்பி விடலாம்.பணம் சம்பாதிக்க,
கடும் வெயி லையும் பொருட்படுத்தாமல் பணி புரிந்தார்.
இக்கரைக்கு அக்கரை பச்சை.உழைப்பிற்கு அளவான ஊதியம் தான் கிடைத்தது.ஆனால் அங்கு இயற்கையாக வாழ முடியவில்லை.
வெய்யில் தாங்க முடியாது. குளிர் சாதனம் இயங்காமல் தூங்க முடியாது.இயற்கையான குடிநீரை பெற முடியவில்லை.கடல் உணவை தவிர வேறு எதுவும் அங்கு உற்பத்தி ஆவது இல்லை.
தன்னுடைய ஒரு மாத குழந்தையையும்,திருமணம் ஆகி ஒரு வருடம் ஆன மனைவியையும் விட்டு பிரிந்து வந்தான்.பல நண்பர்கள் அரபு நாட்டுக்கு சென்றால் , அக்கரை பச்சையாக தெரிகிறது,அங்கு போனால் செல்வம் கொழிக்கும் என்று ஆசை வார்த்தையை நம்பி,தான் செய்த விவசாயத்தை வயதான அப்பாவிடம் விட்டு விட்டு வந்து ஒரு வருடம் ஓடி விட்டது.இப்போது அவனுக்கு கிடைக்கும் வருமானம்,அவன் தங்குவதற்கும்,சாப்பிடுவதற்கும் சரியாக இருந்தது.
திரும்பி செல்ல விரும்பினாலும்,அழைத்து வந்த ஏஜென்ட் விட மாட்டார்,அப்படி விட்டாலும் திரும்பி செல்ல கையில் காசு இல்லை.இதே உழைப்பை தன்னுடைய நிலத்தில்,கஷ்டப்பட்டு இருந்தால்,ஒரு வேளை,ஒரு லட்சம் கூட சம்பாதித்து இருக்க முடியும்.
கிடைத்த பயிரை அறுவடை செய்து விற்று வீட்டுக்கு கொடுத்து இருக்க முடியும்,பத்து கோழிகள் வளர்ந்து இருக்கும்,ஐந்து ஆடுகள் மேய்ந்து குட்டி போட்டு இருக்கும்,இரண்டு மாடு பால் கொடுத்து இருக்கும்.
காக்கா, குருவிகள் கூடு கட்டி அடைந்து இருக்கும்.அது அவனுக்கு பெரிய மகிழ்ச்சியை கொடுத்து இருக்கும்.இதுவெல்லாம் எந்த முதலீடுகள் இல்லாமல் நடந்து இருக்கும்.
இயற்கை ஒவ்வொரு நாட்டிற்கு ஏற்ப வித்தியாசமாக பலன் கொடுக்கிறது
அரபு நாட்டு எண்ணெய் பணம் மட்டும் தான் கொடுக்கும்.அதை நம்பி வேறு எதுவும் வளராது.
ஆனால் சொந்த ஊரில்,கட்டந்தரையாக கிடந்தால் கூட பசுவும்,ஆடும் கோழியும் கிடைத்த உணவை உண்டு தானும் வாழ்ந்து பிறரையும் வாழ வைக்கும்.
இயற்கையாக வாழ வைக்கும் இந்த நாடா,இல்லை பாலைவனத்தில் ஒட்டகம் மேய்ப்பதா எது சிறந்தது என்று யோசிக்க,அவசர பட்டு விட்டோம் என்பது மட்டும் கபிலனுக்கு
புரிந்தது.
