பைலட்
பைலட்
லண்டனில் இருந்து சென்னைக்கு புறப்படும்
விமானத்தில் உதவி பைலட் முகுந்தன் பொறுப்பு எடுக்க விமான நிலையம் வந்தார்.மருத்துவ பரிசோதனையில் அவர் இன்னும் போதையில் இருந்து தெளிவில்லை என்று குறிப்பு தெரிவிக்க,
அவருக்கு பதில் வேறு ஒருவர் பொறுப்பு எடுத்து கொண்டார்.
அவருடைய ஒரே மகன் சென்னையில் விபத்தில் அடிபட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.
அவரை பார்க்க அவர் மனம் துடித்தது.ஆனால் அவரால் அந்த விமானத்தில் பறக்க முடியவில்லை.
ஒரு பயணியாகவாவது அதில் பயணம் செய்ய
அங்கும் இங்கும் ஓடி அனுமதி கேட்டு கொண்டு இருந்தார்.ஆனால் அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை.
இனி அடுத்த விமானம் அடுத்த நாள் தான்.வழக்கமாக அதிகம் குடிக்க மாட்டார்.நண்பரின் நச்சரிப்பு,கூடவே மகனின் விபத்து செய்தி அவரை கொஞ்சம் அளவுக்கு அதிகமாக குடிக்க வைத்து விட்டது.
மிகவும் வருத்தத்துடன் மனைவிக்கு போன் செய்து பேசினார்.ஒரே மகன் நண்பனின் பிறந்த நாள் பார்ட்டிக்கு சென்று விட்டு திரும்பும் போது கார் விபத்துக்கு உள்ளாகி இருந்தது.விபத்திற்கு காரணம் மகன் குடிபோதையில் கட்டுப்பாட்டை இழந்து சுற்று சுவர் மீது மோதி தலை குப்புற விழுந்து தலைக்கு அடிபட்டு நினவு இழந்த நிலையில் மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டு இருந்தார்.
உயிர்க்கு ஆபத்தா என்று கேட்க அது இன்னும் 48 மணி நேரம் கழித்து தான் தெரியும் என்று மனைவி
சொல்லி விட்டு அவனுக்கு இரண்டு பாட்டில் இரத்தம் கொடுக்க வேண்டும்.அவனுடையது கிடைக்காத வகை,இரு பாட்டில் அவரது இளைய மகன் கொடுக்க,இன்னும் ஒரு பாட்டில் அவர் தான் கொடுக்க வேண்டும்.மூன்று பேருடைய இரத்தமும் ஒரே வகை.இவர் இந்தியா வந்த பிறகு தான் கொடுக்க முடியும்.
முகுந்தனுக்கு கவலை அதிகம் ஆகி விட்டது.அந்த நேரம் ஒரு பயணி தன்னுடைய பயணத்தை ரத்து செய்து விட்டு அந்த இருக்கையை முகுந்தணுக்கு கொடுக்க முன் வந்தார்.அதை நன்றியுடன் பெற்று கொண்டு பயணம் செய்து அடுத்த நாள் வந்து சேர்ந்தார்.மீண்டும் இரத்த பரிசோதனை செய்த பிறகு
அவரிடம் இரத்தம் சேகரிக்க பட்டு மகனுக்கு செலுத்தினார்கள்.
இப்போது மகன் அபாய கட்டத்தை தாண்டி விட்டார்.
மனைவியும்,இளைய மகனையும் ஆர தழுவி கொண்டார்.இனி மேல் இந்த மதுவை தொட மாட்டேன்
என்று மனைவிக்கு வாக்குறுதி அளித்தார்.
குணமாகி வந்த மகனும் மது குடிபபதை விட்டு விட
முடிவு செய்து பெற்றோருக்கு சத்தியம் செய்து
கொடுத்தான்.
