Saravanan P

Abstract Drama Romance

4.5  

Saravanan P

Abstract Drama Romance

ஒருவனின் கதை அத்தியாயம் 4

ஒருவனின் கதை அத்தியாயம் 4

2 mins
255


தொடர்கதை


இக்கதையில் வரும் பெயர்கள், சம்பவங்கள் அனைத்தும் கற்பனையே.


இக்கதையை படிக்கும் முன் அத்தியாயம் 1 மாமழை,அத்தியாயம் 2 மணப்பெண் கிடைச்சாச்சு,அத்தியாயம் 3 நிச்சயதார்த்தம் படிக்கவும்.


அத்தியாயம் 1 இணைப்பு: https://storymirror.com/read/tamil/story/oruvnnninnn-ktai-attiyaaym-1/qmedp30l


அத்தியாயம் 2 இணைப்பு:

https://storymirror.com/read/tamil/story/oruvnnninnn-ktai-attiyaaym-2/wkxwdpag


அத்தியாயம் 3 இணைப்பு:

https://storymirror.com/read/tamil/story/oruvnnninnn-ktai-attiyaaym-3/sfm1fzqo


அத்தியாயம் 4 கல்யாணம்: கல்யாண நாள்


நீண்ட நாள் இந்த கதையை முடிக்காமல் வைத்திருந்தேன்.இதோ எழுதிருறேன்.



பிப்ரவரி 15,2023

மாசி மற்றும் தனம் வீட்டில் சண்டைபோட்டு கொண்டு வீட்டின் இரு பக்கங்களில் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளாமல் இருந்தனர்.


அவர்களது மகன் இருவரையும் போன் வாயிலாக பேசி சமாதான படுத்த முயல இன்னும் சண்டை முற்றியது.


மகன் இதற்கு மேல் முடியாது என உணர்ந்து எனக்கு போன் பண்ணாதீங்க என சொல்லி தன் வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்.


பிப்ரவரி 16,2023


மாசி, தனம் இருவரும் அன்று காலை எழுந்து ஒருவரை ஒருவர் பார்க்க கூட இல்லாமல் அவர்கள் வேலையை மட்டும் பார்த்து கொண்டு இருந்தனர்.


மாசி சாப்பிடாமல் வெளியே கிளம்ப சாப்பிடலயா? என தனம் குரல் பின்னால் கேட்க மாசி அதெல்லாம் தேவை இல்லை என வெளியே கிளம்பினார்.


மதியம் வீடு வந்த மாசி மதியம் தன் மாத்திரகளை சரி பார்த்து வாங்க செல்லும் பொழுது உனக்கு மாத்திரை வாங்கனுமா? என கேட்க அதெல்லாம் ஒன்னும் தேவை இல்லை என சொல்ல இருவரும் மீண்டும் சண்டையிட்டனர்.


தனம் சாப்பாடு எடுத்து வைக்க மாசி சாப்பிட்டு விட்டு வெளியே செல்ல வீடு மீண்டும் அமைதி ஆனது.


பிப்ரவரி 18,2002


மாசியின் குடிபழக்கம் மற்றும் சிகரட் பழக்கம் தனத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.


இருவரும் அன்று பெரிதாக பேசிக்கொள்ளவில்லை.


அடுத்த வந்த மாதங்களில், தனம் கரு தரித்த பின் தனது பிடிவாதத்தால் மாசியை சிகரட் மற்றும் மது பழக்கத்தில் இருந்து மீட்டு கொண்டு வந்தார்.


பிப்ரவரி 16,2023



இரவு வீட்டிற்கு வந்த மாசி தான் பேசியது தவறு என மன்னிப்பு கேட்க தனம் அதை கேட்டும் பேசாமல் எழுந்து செல்ல மாசி வாயிற்குள் முனகினார்.


தோசை கல் போடும் சத்தம் கேட்ட‌ மாசி சண்டை முடிவடைந்தை உணர்ந்து மகிழ்ச்சியைடந்தார்.


பிப்ரவரி 17,2023


தனம்,மாசி இருவரும் மகிழ்ச்சியாக கல்யாண நாளை முன்னிட்டு திருவானைக்காவல் மற்றும் மலைக்கோட்டை ஒன்றாக சென்று வழிப்பட்டு மகிழ்ச்சியாக இருந்தனர்.


இதை அவர்கள் மகனிடம் சொல்ல "நீங்க ரெண்டு பேர் என்னமோ பண்ணுங்க!" என போனை கட் செய்து தனது வேலைகளை பார்த்தான்.





Rate this content
Log in

Similar tamil story from Abstract