நண்பன்
நண்பன்
நட்பு என்பது உறவை விட வலிமையான பந்தம்.
ஆபத்து என்று வந்ததும் நண்பன் தான் ஓடி வந்து நிற்பான்.அப்படி நினைத்து கொண்டு தான் முகுந்தன் தன் நண்பன் மூர்த்தியை வீட்டிற்க்கு அழைத்து வந்து அன்யோன்யம் பாராட்டி நட்பை வளர்த்து வந்தான்.
அப்படி இருந்தும் முகுந்தனின் அம்மா,நட்பு தேவை தான்,இவ்வளவு நெருக்கம் தேவை இல்லை.சதா காலமும் மூர்த்தி முகுந்தன் வீட்டில் தான் உண்பதும் உறங்குவதும்.
அம்மா அவனிடம் உனக்கு திருமணம் ஆகி விட்டால் நண்பனை இங்கு வைத்து கொள்ள முடியாது.வரப்போகும் மனைவி என்னை மாதிரி உன் நண்பனுக்கு ஆக்கி போட மாட்டாள்.
இந்த நட்பை கொஞ்சம் தள்ளி வை.
அவனுக்கும் வீடு வாசல் பெற்றோர் இருக்கிறார்கள்.தேவை படும் போது வரட்டும் என்று கூறி பார்த்தார்கள்.
ஆனால் முகுந்தன் நண்பனை விடுவதாக இல்லை.எனக்கு உரிமையான எல்லா பொருளிலும் உனக்கும் பாதி உரிமை இருக்கு என்று சொல்லி வைத்து இருந்தான்.
சட்டை,பைக்,போன்,இப்படி அத்தனை பொருளையும் மூர்த்தியும் உரிமை கொண்டாடி வந்தான்.
முகுந்தனுக்கு திருமணம் ஆகியது.மூன்று மாதங்கள் கடந்து விட்டது.வந்த
மனைவியும்கணவனின் நண்பன் என்று மூர்த்திக்கு சேவை செய்து கொண்டு இருந்தாள்.
ஒரு நாள் இரவு சாப்பிட்டு முடித்து விட்டு நண்பர்கள் இருவரும் பேசி கொண்டு இருக்க,முகுந்தன் மனைவி அலுப்பாக இருக்க நேரமே தூங்க சென்று விட்டாள்.
மூர்த்தி தூங்க போகிறேன் என்று சொல்லி நேராக முகுந்தன் அறைக்கு சென்று கதவை தாளிட்டு கொண்டான்.உள்ளே அவன் மனைவி உறங்கி கொண்டு இருக்கிறாள்.இது என்ன,இது கூட தெரியாமல் அந்த அறைக்கு மூர்த்தி சென்று தாளிட்டு கொண்டு இருக்கிறான்,இவனுக்கு பைத்தியமா, என்று சொல்லி கொண்டு கதவை திறக்க சொல்லி பலமாக,தட்டினான்.சத்தம் கேட்டு,கதவை தாழ் போடாமல் தானே படுத்தோம் அப்புறம் ஏன் கணவர் சத்தம் போடுகிறார் என்று வந்து மனைவி கதவை திறக்க,அவள் கையை பிடித்து வெளியில் இழுத்து விட்டு,உள்ளே சென்று,அங்கு படுத்து இருந்த மூர்த்தியை தட்டி எழுப்பினான்.
மூர்த்தி முகுந்தனை பாத்துஎன்னடா ஆச்சி,நாம் இருவரும் உன்னுடைய அறையில் ஒன்றாக தானே படுத்து கொள்வோம்,இப்போது மட்டும் என்னை உன் அறையில் படுக்க சம்மதிக்க முடியாது என்கிறாய். என்று கேட்டான்.முகுந்தன் அதற்கு டேய் என் மனைவி இருக்கிறாள்
,உன்னை எப்படி அனுமதிக்க முடியும் என்று கேட்டான்.
மூர்த்தி நீ தாண்ட உன்னுடைய அத்தனை உடமைகளும் எனக்கும் சொந்தம் என்று சொல்லி இருக்கே.இப்போது மட்டும் ஏன் இந்த பாகு பாடு என்று கேட்க, முகுந்தனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.நட்புக்கும் ஒரு எல்லை உண்டு என்று முகுந்தனுக்க இப்போது புரிந்தது.
