நினைத்தாலே வலிக்குதே
நினைத்தாலே வலிக்குதே
சரவணன் அன்று அசைன்மேண்ட் அதிகமாக இருந்ததால் வேலைகளில் மூழ்கி இருந்தான் திடீரென அவனுக்கு தண்ணீர தாகம் எடுக்க தண்ணீர் பாட்டிலை எடுக்க எழுந்து செல்கிறான் அப்பொழுது அவன் மொபைலின் இன்ஸ்டா ஆப்பின் நொடிபிகேஷன் வருகிறது.
அது அவன் கல்லூரியின் கிளப் ஆக்டிவிடி பற்றிய புகைப்படங்கள் அதை அவன் பார்க்கும் போது ஒரு போட்டோவில் ஒரு பெண்ணை பார்த்து விட்டு நீண்ட யோசனையில் ஆழ்ந்தான்.
அந்த பெண்ணுக்கு அவன் மெசெஜ் அனுப்பினான்,வாழ்த்துக்கள் என்று.அந்த பெண்ணுடன் சிறிது நேரம் பேசி விட்டு திரும்பினான்.
அவன் முகத்தில் இருந்த சிரிப்பு,மகிழ்ச்சிக்கு காரணம் இந்நேரம் நீங்கள் கண்டுபிடித்து இருப்பீர்கள் ஆம் காதல் தான்.அந்த பெண்ணிடம் சொல்ல நேரம் பார்த்து கொண்டிருந்தான்.
திடீரென அவன் பள்ளி வாழ்க்கையை நினைக்கும் போது கண்களில் கண்ணீர் மட்டும் தான் காதலித்த பெண் தன் பின்னே கடைசியில் வந்ததை நினைத்து துடித்தான்.
சரவணன்,அபிநயா
சரவணன் பள்ளியில் படிக்கும் போது பெண்களுடன் தோழமையாக பேசுவான்.
ஒரு எக்ஸ்ம் அப்பொழுது தான் தன் பக்கத்தில் அமர்ந்த அபிநயாவை பார்த்தான்.
அபிநாயவும் இவனும் அந்த எக்ஸ்ம் ஹாலிலேயே பிரண்ட்ஸ் ஆனார்கள்,இருவரும் பள்ளியில் அதிகமாக பேச ஆரம்பித்தார்கள்.
சரவணன் அபிநயா மீது காதல் வந்ததை உணர்ந்தான்.
அந்த ஆண்டின் கடைசி நாள்,சரவணன் அபிநயாவுடன் பேசாமல் அவன் அப்பா கெட் பக்கத்தில் நிற்பதை பார்த்து செல்கிறான்.
அபிநயா தன் பின்னால் வருவதை உணர்ந்து வேகமாக நடந்தான்.
அடுத்த வருடம் பள்ளி திறந்த பொழுது அவனுக்கு மகிழ்ச்சி அபிநயாவை பார்க்கலாம் என.
பள்ளியில் அபிநயாவை சந்திக்கும் இடமெல்லாம் சென்று தேடி பார்க்கிறான்.
ஒவ்வொரு இடமாக செல்ல செல்ல பீதியில் அவன் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.
இறுதியாக அபிநயா அந்த பள்ளியில் இருந்த வேறு ஊர் சென்றதை அவன் தோழி மூலம் அறிகிறான்.
அவளை தொடர்ப்பு கொள்வதற்கு நம்பர் கூட வாங்காமல் இருந்ததையும்,அவள் பின்னால் வந்தும் தான் பேசாமல் போனதை எண்ணி மனம் நொந்து போனான்.
"நம் வாழ்க்கையில் ஒரு விஷயம் இல்லை என தெரிந்த பின்பு தான் மனதில் அதை நினைத்து நினைத்து வேதனைப்படுவோம்."
சரவணன் பின்பு தான் இப்பொழுது காதலிக்கும் பெண்ணும் தன்னை விட்டு போய்விடுவாலோ என்ற பயத்தில் அவளிடம் காதலை சொல்ல அந்த பெண் நிதானமாக காரணங்களை எடுத்து கூறி அவனுடைய காதலை மறுத்துவிட்டாள்.
பயத்தின் காரணமாக இப்பொழுது செய்த செயலால் அபிநயாவை இழந்தது போல் இந்த பெண்ணும் தன் வாழ்க்கையில் இல்லை என யோசித்து கொண்டே கண்ணீர் துளிர்த்து கொண்டு இருந்தான்.
இரண்டு வருடம் கழித்து,
காதல் தோல்வி வலிகளையெல்லாம் நினைவுகளாக்கி கொண்டு கம்பெனி வேலையில் நிம்மதியாக வேலை பார்த்து கொண்டிருந்தான் சரவணன்.